• May 19 2024

மருந்து கேட்ட தாயை அடித்துக் கொன்ற மகன்..! இலங்கையில் கொடூரம்

Chithra / Jan 7th 2024, 9:08 am
image

Advertisement

 

கம்பளை - ரத்மல்கடுவ பிரதேசத்தில் மகனின் தாக்குதலால் தாயொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

65 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் தனது இரண்டாவது மகனால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

34 வயதுடைய சந்தேகநபரான மகன் திருமணமானவர் எனவும் அவரது மனைவி வெளிநாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர் தனது 8 வயது மகளுடன் இந்த வீட்டில் வசித்து வருவதுடன், நோய்வாய்ப்பட்ட அவரது தாயாரும் அந்த வீட்டில் வசித்து வருகிறார்.

சந்தேகநபர் நேற்றுமுன்தினம் கம்பளைக்கு வந்தபோது, ​​சந்தேகநபரின் மகனிடம் மருந்து எடுத்து வருமாறு தாய் கூறியுள்ளார்.

ஆனால் அவர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது மருந்து கொண்டு வரவில்லை என தாய் குற்றம் சாட்டியுள்ளார், இதனால் மகன் ஆத்திரமடைந்து தாயை தாக்கியுள்ளார்.

தனது தந்தை தனது பாட்டியை இரும்பு கம்பியால் தாக்கியதாக சந்தேகநபரின் 8 வயது மகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். 

எனினும் தாயை நாற்காலியால் தாக்கியதாக சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் கடினமான பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த வீட்டிற்கு அருகில் வேறு வீடுகள் எதுவும் இல்லாததால் தாக்கப்பட்ட தாய் மறுநாள் காலை வரை வீட்டிலேயே வைக்கப்பட்டுள்ளார்.

மறுநாள் காலை இந்தப் பெண்ணின் மற்றொரு மகன் தாயை கம்பளை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றான். 

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மதியம் உயிரிழந்தார்.

இந்த நியைில் தலைமறைவாகியிருந்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.


மருந்து கேட்ட தாயை அடித்துக் கொன்ற மகன். இலங்கையில் கொடூரம்  கம்பளை - ரத்மல்கடுவ பிரதேசத்தில் மகனின் தாக்குதலால் தாயொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.65 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் தனது இரண்டாவது மகனால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.34 வயதுடைய சந்தேகநபரான மகன் திருமணமானவர் எனவும் அவரது மனைவி வெளிநாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அவர் தனது 8 வயது மகளுடன் இந்த வீட்டில் வசித்து வருவதுடன், நோய்வாய்ப்பட்ட அவரது தாயாரும் அந்த வீட்டில் வசித்து வருகிறார்.சந்தேகநபர் நேற்றுமுன்தினம் கம்பளைக்கு வந்தபோது, ​​சந்தேகநபரின் மகனிடம் மருந்து எடுத்து வருமாறு தாய் கூறியுள்ளார்.ஆனால் அவர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது மருந்து கொண்டு வரவில்லை என தாய் குற்றம் சாட்டியுள்ளார், இதனால் மகன் ஆத்திரமடைந்து தாயை தாக்கியுள்ளார்.தனது தந்தை தனது பாட்டியை இரும்பு கம்பியால் தாக்கியதாக சந்தேகநபரின் 8 வயது மகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். எனினும் தாயை நாற்காலியால் தாக்கியதாக சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.மிகவும் கடினமான பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த வீட்டிற்கு அருகில் வேறு வீடுகள் எதுவும் இல்லாததால் தாக்கப்பட்ட தாய் மறுநாள் காலை வரை வீட்டிலேயே வைக்கப்பட்டுள்ளார்.மறுநாள் காலை இந்தப் பெண்ணின் மற்றொரு மகன் தாயை கம்பளை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றான். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மதியம் உயிரிழந்தார்.இந்த நியைில் தலைமறைவாகியிருந்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement