யாழ்ப்பாணம் - சென்னை விமான சேவை நேற்றையதினம்(12) மீண்டும் ஆரம்பமாகியது.
இந்நிலையில் நேற்றையதினம் காலை சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் முற்பகல் 11.30 மணிக்கு தரையிறங்கியது.
அதேவேளை யாழ்ப்பாணம் - சென்னை விமான சேவை வாரத்தில் திங்கள் செவ்வாய் வியாழன் சனி ஆகிய நாட்களுக்கு விமான சேவை இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பயணிகளின் போக்குவரத்துத் தேவையை கருத்திற்கொண்டு யாழில் இருந்து விமான நிலையத்திற்கு செல்லுவதற்கான போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,
திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய தினங்களில் மு.ப 10.50 மணிக்கு பலாலி விமான நிலையத்தை வந்தடையும் விமானங்கள் அதேதினங்களில் மு.ப 11.50 மணிக்கு பலாலி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும்.
இந்த விமான சேவையின் பயணிகளுக்காக யாழ் நகரின் புதிய தனியார் பேருந்து நிலையத்திலிருந்து குறித்த தினங்களில் காலை 8மணிக்கு பலாலி விமான நிலையத்திற்கும் அவ்வாறே விமான நிலையத்திலிருந்து நண்பகல் 12 மணிக்கு யாழ் நகர் நோக்கியும் பேருந்து சேவை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வோருக்கான விசேட அறிவித்தல் யாழ்ப்பாணம் - சென்னை விமான சேவை நேற்றையதினம்(12) மீண்டும் ஆரம்பமாகியது. இந்நிலையில் நேற்றையதினம் காலை சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் முற்பகல் 11.30 மணிக்கு தரையிறங்கியது.அதேவேளை யாழ்ப்பாணம் - சென்னை விமான சேவை வாரத்தில் திங்கள் செவ்வாய் வியாழன் சனி ஆகிய நாட்களுக்கு விமான சேவை இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பயணிகளின் போக்குவரத்துத் தேவையை கருத்திற்கொண்டு யாழில் இருந்து விமான நிலையத்திற்கு செல்லுவதற்கான போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பில் வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய தினங்களில் மு.ப 10.50 மணிக்கு பலாலி விமான நிலையத்தை வந்தடையும் விமானங்கள் அதேதினங்களில் மு.ப 11.50 மணிக்கு பலாலி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும். இந்த விமான சேவையின் பயணிகளுக்காக யாழ் நகரின் புதிய தனியார் பேருந்து நிலையத்திலிருந்து குறித்த தினங்களில் காலை 8மணிக்கு பலாலி விமான நிலையத்திற்கும் அவ்வாறே விமான நிலையத்திலிருந்து நண்பகல் 12 மணிக்கு யாழ் நகர் நோக்கியும் பேருந்து சேவை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.