• May 20 2025

குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை தொடர்பில் சபாநாயகரின் விசேட அறிவிப்பு!

Chithra / May 20th 2025, 3:00 pm
image

 

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (20) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

அதற்கமைய, முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த பின்னர், சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பிற்கு முரணானது எனத் தீர்மானிப்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை என கருதுவதாக உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதுடன் அதன்படி, மனுதாரர் இந்த மனுவை மீளப் பெறுவதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மனுவை மீளப்பெறுவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் மனு தொடர்பான எதிர்வரும் நடவடிக்கைகளை முடிவுறுத்தி அதனைத் தள்ளுபடி செய்துள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை தொடர்பில் சபாநாயகரின் விசேட அறிவிப்பு  அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (20) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.அதற்கமைய, முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த பின்னர், சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பிற்கு முரணானது எனத் தீர்மானிப்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை என கருதுவதாக உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதுடன் அதன்படி, மனுதாரர் இந்த மனுவை மீளப் பெறுவதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.இதேவேளை, மனுவை மீளப்பெறுவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் மனு தொடர்பான எதிர்வரும் நடவடிக்கைகளை முடிவுறுத்தி அதனைத் தள்ளுபடி செய்துள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement