பாடசாலைகளுக்கான தவணை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், 2023ம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை நாளை (22) வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதேவேளை, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிடுகின்றது.