வருடாந்த சிவனொளிபாத மலை யாத்திரை காலம் டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சிவனொளிபாத மலை விஹா ராதிபதி, சப்ரகமுவ பிரதம சங்கநா யக்கர் மற்றும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக வேந்தர் வணக் கத்துக்குரிய பெங்கமுவே ஸ்ரீ தம்ம தின்ன தேரரின் வழிகாட்டலின் கீழ், வருடாந்த சிவனொளிபாத மலை யாத்திரை டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகிறது.
பாரம்பரிய சம்பிராதயங்கள் மற்றும் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு இந்த யாத்திரை ஆரம்பமாகுமென புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்பொத்தவல சிவனொளிபாத மலை விகாரையிலிருந்து சிவனொளிபாத மலை உச்சிக்கு புனிதப்பெட்டியும் சமன் சிலையும் எடுத்துச் செல்லப்படவுள்ளது.
இந்த தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பெங்கமுவே ஸ்ரீ தம்மதின்ன தேரர்,
அடியார்கள் சிலரின் நடத்தைகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் அழிவுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை அடியார்கள் தமது வழிபாட்டு முறைகளை பாதுகாப்பான முறையில் முன்னெடுப்பதற்கு விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
சிவனொளிபாத மலை பருவ கால யாத்திரை தொடர்பில் விசேட அறிவிப்பு.samugammedia வருடாந்த சிவனொளிபாத மலை யாத்திரை காலம் டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,சிவனொளிபாத மலை விஹா ராதிபதி, சப்ரகமுவ பிரதம சங்கநா யக்கர் மற்றும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக வேந்தர் வணக் கத்துக்குரிய பெங்கமுவே ஸ்ரீ தம்ம தின்ன தேரரின் வழிகாட்டலின் கீழ், வருடாந்த சிவனொளிபாத மலை யாத்திரை டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகிறது.பாரம்பரிய சம்பிராதயங்கள் மற்றும் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு இந்த யாத்திரை ஆரம்பமாகுமென புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.கல்பொத்தவல சிவனொளிபாத மலை விகாரையிலிருந்து சிவனொளிபாத மலை உச்சிக்கு புனிதப்பெட்டியும் சமன் சிலையும் எடுத்துச் செல்லப்படவுள்ளது. இந்த தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பெங்கமுவே ஸ்ரீ தம்மதின்ன தேரர், அடியார்கள் சிலரின் நடத்தைகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் அழிவுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளன. அதேவேளை அடியார்கள் தமது வழிபாட்டு முறைகளை பாதுகாப்பான முறையில் முன்னெடுப்பதற்கு விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.