• Oct 03 2024

முப்பது வாகனங்களை இறக்குமதி செய்ய விசேட அனுமதி..! ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி!

Chithra / Jan 16th 2024, 3:12 pm
image

Advertisement

 

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி மூலம்,

 30 வகையான மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு நான்கு அரச நிறுவனங்களுக்கு மாத்திரம் விண்ணப்பிக்க விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகனங்களின் இறக்குமதியை பாதிக்கும் ஏனைய அனைத்து விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகம் வழங்குவார் என்றும் இந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படவுள்ள புதிய ரக வாகனங்கள் அரச நிறுவனங்களின் கள நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, சுகாதார அமைச்சு ஆகியவற்றுக்கு முறையே புதிய எஸ்யூவி மற்றும் டபுள் கேப் பிக்கப் டிரக் ஆகிய வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு மற்றும் கடற்படைக்கு இரண்டு புதிய பேருந்துகளும், தேசிய விமான நிறுவனமான சிறிலங்கன் ஏயர்லைன்ஸ் இற்கு மூன்று "அதி சொகுசு பேருந்துகளையும்" இறக்குமதி செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   


முப்பது வாகனங்களை இறக்குமதி செய்ய விசேட அனுமதி. ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி  நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி மூலம், 30 வகையான மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு நான்கு அரச நிறுவனங்களுக்கு மாத்திரம் விண்ணப்பிக்க விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மோட்டார் வாகனங்களின் இறக்குமதியை பாதிக்கும் ஏனைய அனைத்து விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகம் வழங்குவார் என்றும் இந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.இறக்குமதி செய்யப்படவுள்ள புதிய ரக வாகனங்கள் அரச நிறுவனங்களின் கள நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, சுகாதார அமைச்சு ஆகியவற்றுக்கு முறையே புதிய எஸ்யூவி மற்றும் டபுள் கேப் பிக்கப் டிரக் ஆகிய வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கல்வி அமைச்சு மற்றும் கடற்படைக்கு இரண்டு புதிய பேருந்துகளும், தேசிய விமான நிறுவனமான சிறிலங்கன் ஏயர்லைன்ஸ் இற்கு மூன்று "அதி சொகுசு பேருந்துகளையும்" இறக்குமதி செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

Advertisement

Advertisement

Advertisement