• Sep 24 2024

புதிய ஜனாதிபதிக்கு ஆசிவேண்டி கொக்கட்டிச்சோலையில் விசேட பூஜை வழிபாடுகள்..!

Sharmi / Sep 24th 2024, 7:23 am
image

Advertisement

இலங்கையின் 9வது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு ஆசிவேண்டி மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் நேற்றையதினம்(23) விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

தேசிய மக்கள் சக்தியின் பட்டிப்பளை பிரதேச கிளையின் ஏற்பாட்டில் இந்த வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

பட்டிப்பளை பிரதேச கிளையின் தலைவர் ரவீந்திரனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த வழிபாடுகளில், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

நாட்டில் சிறப்பாக ஆட்சி அமையவும் நாட்டு சுபீட்சமான எதிர்காலத்தினை நோக்கி பயணிக்கவும் இதன்போது பிரார்த்தனை செய்யப்பட்டது.

இதன்போது தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கு வாக்களித்து வெற்றிக்கு வழிவகுத்த வாக்காளர்களுக்கு பட்டிப்பளை பிரதேச கிளையினால் நன்றி தெரிவிக்கப்பட்டது.



புதிய ஜனாதிபதிக்கு ஆசிவேண்டி கொக்கட்டிச்சோலையில் விசேட பூஜை வழிபாடுகள். இலங்கையின் 9வது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு ஆசிவேண்டி மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் நேற்றையதினம்(23) விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.தேசிய மக்கள் சக்தியின் பட்டிப்பளை பிரதேச கிளையின் ஏற்பாட்டில் இந்த வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.பட்டிப்பளை பிரதேச கிளையின் தலைவர் ரவீந்திரனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த வழிபாடுகளில், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.நாட்டில் சிறப்பாக ஆட்சி அமையவும் நாட்டு சுபீட்சமான எதிர்காலத்தினை நோக்கி பயணிக்கவும் இதன்போது பிரார்த்தனை செய்யப்பட்டது.இதன்போது தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கு வாக்களித்து வெற்றிக்கு வழிவகுத்த வாக்காளர்களுக்கு பட்டிப்பளை பிரதேச கிளையினால் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement