• Apr 16 2026

புத்தாண்டை முன்னிட்டு விசேட பாதுகாப்புத் திட்டம்

Aathira / Apr 1st 2026, 4:31 pm
image

சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொலிஸாரால் விசேட பாதுகாப்புத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள 608 பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

வாகனச் சோதனைகள் உள்ளிட்ட வீதிப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 10,000க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புத்தாண்டு காலத்தில் பொதுமக்கள் அதிக அளவில் வெளியே செல்வதாலும், வீதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதாலும் இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

அதே நேரத்தில், பொதுமக்கள் சாலை விதிகளை கடைப்பிடித்து பாதுகாப்பாக பயணிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புத்தாண்டை முன்னிட்டு விசேட பாதுகாப்புத் திட்டம் சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொலிஸாரால் விசேட பாதுகாப்புத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.நாட்டிலுள்ள 608 பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. வாகனச் சோதனைகள் உள்ளிட்ட வீதிப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 10,000க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.புத்தாண்டு காலத்தில் பொதுமக்கள் அதிக அளவில் வெளியே செல்வதாலும், வீதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதாலும் இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில், பொதுமக்கள் சாலை விதிகளை கடைப்பிடித்து பாதுகாப்பாக பயணிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement