பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளிபாதமலை யாத்திரை ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு ரயில்வே திணைக்களம் இன்று முதல் விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளது.
இதன்படி கொழும்பு – கோட்டையிலிருந்து பதுளை, அநுராதபுரம், திருகோணமலை ஆகிய நகரங்களுக்கான ரயில் சேவைகளை முன்னெடுக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இன்று முதல் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள ரயில் சேவைக்கான முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு – கோட்டையிலிருந்து பதுளை நோக்கி இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள விசேட ரயில் சேவையானது இரவு 7.30க்கு புறப்படவுள்ளது.
அந்த ரயில் கொழும்பு – கோட்டை ரயில் நிலையம் நோக்கி அந்த நாட்களில் பிற்பகல் 5.20க்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.
இதுதவிர, கொழும்பு – கோட்டையிலிருந்து திருகோணமலை நோக்கி எதிர்வரும் 29,30 மற்றும் 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள விசேட ரயில் சேவையானது காலை 5.15க்கு புறப்படவுள்ளது.
அந்த ரயில் திருகோணமலை ரயில் நிலையத்திலிருந்து அந்த நாட்களில் பிற்பகல் 1 மணிக்குப் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் விசேட ரயில் சேவைகள் பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளிபாதமலை யாத்திரை ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு ரயில்வே திணைக்களம் இன்று முதல் விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளது. இதன்படி கொழும்பு – கோட்டையிலிருந்து பதுளை, அநுராதபுரம், திருகோணமலை ஆகிய நகரங்களுக்கான ரயில் சேவைகளை முன்னெடுக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. இன்று முதல் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள ரயில் சேவைக்கான முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, கொழும்பு – கோட்டையிலிருந்து பதுளை நோக்கி இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள விசேட ரயில் சேவையானது இரவு 7.30க்கு புறப்படவுள்ளது. அந்த ரயில் கொழும்பு – கோட்டை ரயில் நிலையம் நோக்கி அந்த நாட்களில் பிற்பகல் 5.20க்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. இதுதவிர, கொழும்பு – கோட்டையிலிருந்து திருகோணமலை நோக்கி எதிர்வரும் 29,30 மற்றும் 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள விசேட ரயில் சேவையானது காலை 5.15க்கு புறப்படவுள்ளது. அந்த ரயில் திருகோணமலை ரயில் நிலையத்திலிருந்து அந்த நாட்களில் பிற்பகல் 1 மணிக்குப் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.