• Jul 02 2024

இலங்கை இந்திரஜித்தின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றிய சரிகமப!

Tamil nila / Jun 30th 2024, 7:01 pm
image

Advertisement

இலங்கை இந்திரஜித்தின் நீண்ட நாள் கனவை  சரிகமப இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிறைவேற்றியுள்ளனர். 

மறைந்த பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் நினைவிடத்திற்கு சென்று இலங்கை இந்திரஜித் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அத்துடன் இது குறித்த ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளது.

மேலும் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி உலக அளவில் புகழ் பெற்ற பாடகராக திகழ்ந்தவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

அவருடைய பாடல்களை மட்டும் கேட்டு பாடகரான இந்திரஜித் குரு எஸ்.பி.பியின் நினைவிடத்திற்கு சென்று ஆசி வாங்க வேண்டும் என்று சரிகமப மேடையில் தெரிவித்திருந்தார்.



இந்த நிலையில், டெடிகேஷன் ரவுண்டில் அவரின் ஆசையை ஜீ தமிழ் நிறை வேற்றியுள்ளது.

இதற்கமைய குருவின் ஆசிர்வாதத்துடன் இந்திரஜித் இனி களம் காண போகின்றமை குறிப்பிடத்தக்கது.




இலங்கை இந்திரஜித்தின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றிய சரிகமப இலங்கை இந்திரஜித்தின் நீண்ட நாள் கனவை  சரிகமப இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிறைவேற்றியுள்ளனர். மறைந்த பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் நினைவிடத்திற்கு சென்று இலங்கை இந்திரஜித் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.அத்துடன் இது குறித்த ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளது.மேலும் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி உலக அளவில் புகழ் பெற்ற பாடகராக திகழ்ந்தவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.அவருடைய பாடல்களை மட்டும் கேட்டு பாடகரான இந்திரஜித் குரு எஸ்.பி.பியின் நினைவிடத்திற்கு சென்று ஆசி வாங்க வேண்டும் என்று சரிகமப மேடையில் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், டெடிகேஷன் ரவுண்டில் அவரின் ஆசையை ஜீ தமிழ் நிறை வேற்றியுள்ளது.இதற்கமைய குருவின் ஆசிர்வாதத்துடன் இந்திரஜித் இனி களம் காண போகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement