• Sep 20 2024

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக உலகம் அறிந்த ஒருவர் வேண்டும் - ரொஷான் அறிவுரை

Chithra / Aug 5th 2024, 1:01 pm
image

Advertisement


ஐக்கிய தேசியக் கட்சியையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் மீண்டும் கட்டியெழுப்ப முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் திருடர்களை விரட்டி திருடர்களைப் பிடிப்பதற்காக மக்களை நியமித்ததாகவும் அது நடக்காத காரணத்தினால் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக நியமித்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த நாட்டில் ஊழல் மோசடிகளுக்கு இனி இடமில்லை, புதிய வேலைத்திட்டத்துடன் இந்த நாடு கட்டியெழுப்பப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக உலகம் அறிந்த ஒருவரை முன்னிறுத்த வேண்டும் என்றும், பொதுஜன பெரமுனவைக் கட்டியெழுப்ப கடுமையாக உழைத்தவர்கள் இருப்பதாகவும், அத்தகைய ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பது நல்லது என்றும் அவர் தெரிவித்தார்.

தாம் அமைச்சுப் பதவிக்காக முன்னும் பின்னுமாக குதிப்பவர் அல்ல, நாட்டின் எந்த மாவட்டத்தில் இருந்தும் சுதந்திரமாக நின்று பாராளுமன்றம் செல்ல முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக உலகம் அறிந்த ஒருவர் வேண்டும் - ரொஷான் அறிவுரை ஐக்கிய தேசியக் கட்சியையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் மீண்டும் கட்டியெழுப்ப முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.பொலன்னறுவையில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் திருடர்களை விரட்டி திருடர்களைப் பிடிப்பதற்காக மக்களை நியமித்ததாகவும் அது நடக்காத காரணத்தினால் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக நியமித்ததாகவும் தெரிவித்தார்.மேலும் இந்த நாட்டில் ஊழல் மோசடிகளுக்கு இனி இடமில்லை, புதிய வேலைத்திட்டத்துடன் இந்த நாடு கட்டியெழுப்பப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக உலகம் அறிந்த ஒருவரை முன்னிறுத்த வேண்டும் என்றும், பொதுஜன பெரமுனவைக் கட்டியெழுப்ப கடுமையாக உழைத்தவர்கள் இருப்பதாகவும், அத்தகைய ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பது நல்லது என்றும் அவர் தெரிவித்தார்.தாம் அமைச்சுப் பதவிக்காக முன்னும் பின்னுமாக குதிப்பவர் அல்ல, நாட்டின் எந்த மாவட்டத்தில் இருந்தும் சுதந்திரமாக நின்று பாராளுமன்றம் செல்ல முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement