• Sep 19 2024

விசேட சுற்றிவளைப்பில் குதித்த இலங்கை பாதுகாப்புப் படையினர்..! அழிக்கப்பட்ட கஞ்சா செடிகள்

Chithra / Aug 5th 2024, 12:47 pm
image

Advertisement


தனமல்வில, ஹம்பேகமுவ பிரதேசத்தில் இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையிர் மற்றும் பொலிஸார் இணைந்து விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளனர்.  

இதன்போது, பயிரிடப்பட்டிருந்த  ஐம்பதாயிரம் கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சா செடிகள் அனைத்தும் தீ வைத்து எறிக்கப்பட்டுள்ளன.   

இந்த கஞ்சா செடிகளின் மொத்த மதிப்பு ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமானது ஆகும்.


இதேவேளை,  சந்தேகத்தின் பேரில் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.  

விசேட சுற்றிவளைப்பில் குதித்த இலங்கை பாதுகாப்புப் படையினர். அழிக்கப்பட்ட கஞ்சா செடிகள் தனமல்வில, ஹம்பேகமுவ பிரதேசத்தில் இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையிர் மற்றும் பொலிஸார் இணைந்து விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளனர்.  இதன்போது, பயிரிடப்பட்டிருந்த  ஐம்பதாயிரம் கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இதனையடுத்து, கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சா செடிகள் அனைத்தும் தீ வைத்து எறிக்கப்பட்டுள்ளன.   இந்த கஞ்சா செடிகளின் மொத்த மதிப்பு ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமானது ஆகும்.இதேவேளை,  சந்தேகத்தின் பேரில் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.  

Advertisement

Advertisement

Advertisement