இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு அகதிகளாகச் செல்ல முயன்று நடுகடலில் சிக்கிதவித்த 5 பேரை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக தப்பிச் செல்வது தொடரும் சூழலில் இன்று அதிகாலையும் ஐவர் அகதிகளாக தமிழகம் நோக்கிச் சென்றுள்ளனர்.
இவ்வாறு சென்றவர்களை இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்ட மணல் தீடை பகுதியில் இறக்கிவிடுவதாக தெரிவித்து நடுகடல் பகுதியில் இறக்கிசென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்த தகவல், இரு நாட்டு கடற்படையினரையும் சென்றடைந்துள்ளது.
இதனையடுத்து இலங்கை கடற்படையினர் குறித்த ஐந்துபேரையும் மீட்டு மன்னாருக்கு அழைத்து வந்துள்ளனர். இவர்களில் 3 ஆண்களும் இரு பெண்களும் அடங்குகின்றனர்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி : நடுகடலில் சிக்கிய 5 பேர் மீட்பு இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு அகதிகளாகச் செல்ல முயன்று நடுகடலில் சிக்கிதவித்த 5 பேரை கடற்படையினர் மீட்டுள்ளனர். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக தப்பிச் செல்வது தொடரும் சூழலில் இன்று அதிகாலையும் ஐவர் அகதிகளாக தமிழகம் நோக்கிச் சென்றுள்ளனர்.இவ்வாறு சென்றவர்களை இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்ட மணல் தீடை பகுதியில் இறக்கிவிடுவதாக தெரிவித்து நடுகடல் பகுதியில் இறக்கிசென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்த தகவல், இரு நாட்டு கடற்படையினரையும் சென்றடைந்துள்ளது.இதனையடுத்து இலங்கை கடற்படையினர் குறித்த ஐந்துபேரையும் மீட்டு மன்னாருக்கு அழைத்து வந்துள்ளனர். இவர்களில் 3 ஆண்களும் இரு பெண்களும் அடங்குகின்றனர்.