• Oct 12 2024

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை வைத்து அரசியல் செய்யும் தமிழ் அரசு கட்சியினர்- ஸ்ரீபிரசாத் குற்றச்சாட்டு..!

Sharmi / Oct 12th 2024, 4:36 pm
image

Advertisement

திருகோணமலை திருக்கோனேஸ்வர ஆலயத்தில் அண்மைக் காலமாக இருதரப்புக்கள் ஊழல், நிர்வாக பிரச்சினை என ஒன்றை ஒன்று முட்டி மோதி தற்போது இரு தரப்பும் ஒன்றினைத்து திருகோணமலையில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுகின்றனர் இது தமிழ் சமூகத்தின் இருப்பை பாதிக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட செயலாளர் கிருஷ்ணபிள்ளை சிறீபிரசாத் தெரிவித்தார்

திருகோணமலையில் இன்று (12) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே சிறீபிரசாத்  இவ்வாறு தெரிவித்தார்.

தமிழர்களின் தொன்மையான திருக்கோணேஸ்வர ஆலயம் தொடர்பில் நீதிமன்றம் வரை கொண்டு சென்றவர்கள் தற்போது இரு தரப்பும் ஒன்றினைத்து வீட்டு சின்னத்தில் கூட்டணியாக போட்டியிடுகின்றனர்.

தற்போதைய தலைவர் சட்டத்தரணியான ஒருவரே குறித்த ஆலயத்தின் தலைவராக இருக்கிறார்.

இவர் உடனடியாக பதவி விலக வேண்டும்.

கடந்த காலத்தில் முன்னை நாள் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட சண்முகம் குகதாசன் கிழக்கு முன்னாள் ஆளுநரை நிர்வாக தரப்புடனான கலந்துரையாடல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி பாதுகாத்தவர்.

ஆலயத்தை வைத்து இலங்கை தமிழ் அரசு கட்சி அரசியல் செய்கிறது.

இதனை ஏற்கமுடியாது நிருவாக சபையின் தொண்டர் குழுவும் இவர்களுக்கு அரசியல் நடவடிக்கையில் இறங்க முடியாது தமிழர்களின் இருப்பை அழித்ததை போன்று ஆலய விடயத்தில் செயற்படுவது தமிழ் அரசு கட்சியே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

தமிழ் மக்களை வைத்து பதவிக்காகவும் சுயநல அரசியலில் ஈடுபட்டு தங்களது பொருளாதாரத்தை அபிவிருத்தி அடைய வைக்க பார்க்கின்றனர்.

தமிழ் தேசிய மக்கள் முண்ணனி கட்சி விலைபோக முடியாத ஒரு கட்சியாக 15 வருட காலமாக மக்களுக்காக செயற்பட்டு வருகிறது.

இம்முறை அதிக ஆசனத்தை வடகிழக்கில் கைப்பற்றுவோம் மக்கள் எமது முண்ணனியுடன் இருக்கிறார்கள்.

ஊழல்வாதிகள் வயோதிபர்களுடன் இணைந்து இம்முறை திருகோணமலையில் போட்டியிட விரும்பவில்லை தமிழ் தேசியத்துக்காக பாடுபட்டு மக்களுக்காக நேர்மையான பணியில் இறங்கியுள்ளோம் என்றார்.


திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை வைத்து அரசியல் செய்யும் தமிழ் அரசு கட்சியினர்- ஸ்ரீபிரசாத் குற்றச்சாட்டு. திருகோணமலை திருக்கோனேஸ்வர ஆலயத்தில் அண்மைக் காலமாக இருதரப்புக்கள் ஊழல், நிர்வாக பிரச்சினை என ஒன்றை ஒன்று முட்டி மோதி தற்போது இரு தரப்பும் ஒன்றினைத்து திருகோணமலையில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுகின்றனர் இது தமிழ் சமூகத்தின் இருப்பை பாதிக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட செயலாளர் கிருஷ்ணபிள்ளை சிறீபிரசாத் தெரிவித்தார்திருகோணமலையில் இன்று (12) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே சிறீபிரசாத்  இவ்வாறு தெரிவித்தார்.தமிழர்களின் தொன்மையான திருக்கோணேஸ்வர ஆலயம் தொடர்பில் நீதிமன்றம் வரை கொண்டு சென்றவர்கள் தற்போது இரு தரப்பும் ஒன்றினைத்து வீட்டு சின்னத்தில் கூட்டணியாக போட்டியிடுகின்றனர். தற்போதைய தலைவர் சட்டத்தரணியான ஒருவரே குறித்த ஆலயத்தின் தலைவராக இருக்கிறார். இவர் உடனடியாக பதவி விலக வேண்டும். கடந்த காலத்தில் முன்னை நாள் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட சண்முகம் குகதாசன் கிழக்கு முன்னாள் ஆளுநரை நிர்வாக தரப்புடனான கலந்துரையாடல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி பாதுகாத்தவர். ஆலயத்தை வைத்து இலங்கை தமிழ் அரசு கட்சி அரசியல் செய்கிறது. இதனை ஏற்கமுடியாது நிருவாக சபையின் தொண்டர் குழுவும் இவர்களுக்கு அரசியல் நடவடிக்கையில் இறங்க முடியாது தமிழர்களின் இருப்பை அழித்ததை போன்று ஆலய விடயத்தில் செயற்படுவது தமிழ் அரசு கட்சியே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். தமிழ் மக்களை வைத்து பதவிக்காகவும் சுயநல அரசியலில் ஈடுபட்டு தங்களது பொருளாதாரத்தை அபிவிருத்தி அடைய வைக்க பார்க்கின்றனர். தமிழ் தேசிய மக்கள் முண்ணனி கட்சி விலைபோக முடியாத ஒரு கட்சியாக 15 வருட காலமாக மக்களுக்காக செயற்பட்டு வருகிறது. இம்முறை அதிக ஆசனத்தை வடகிழக்கில் கைப்பற்றுவோம் மக்கள் எமது முண்ணனியுடன் இருக்கிறார்கள்.ஊழல்வாதிகள் வயோதிபர்களுடன் இணைந்து இம்முறை திருகோணமலையில் போட்டியிட விரும்பவில்லை தமிழ் தேசியத்துக்காக பாடுபட்டு மக்களுக்காக நேர்மையான பணியில் இறங்கியுள்ளோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement