சாய்ந்தமருது மற்றும் அதனைச் சுற்றியுள்ள உள்ளூர் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக, பல பிரதான மற்றும் உட்புற வீதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (2) மாலை மழைநீரானது வடிகான்கள் வழியே முறையாக வழிந்தோட வழியின்மையினாலேயே பெரும்பாலான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் பாதசாரிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் வாகனச் சாரதிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதோடு, அன்றாடக் காரியங்களை மேற்கொள்வதிலும் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
முறைசாரா வடிகான் அமைப்புகள் மற்றும் அடைபட்டுள்ள நீர்வரத்து வழிகளை உடனடியாகச் சீரமைத்து, தேங்கியுள்ள வெள்ளநீரை அகற்றுவதற்குப் பிரதேச சபையும் உரிய அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் மகாவலி கங்கை பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தின் "சரசவி மெதுர" விடுதியின் கீழ் தளத்தில் தங்கியிருந்த மாணவர்கள், வெள்ளப் பெருக்கு காரணமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஏனைய மாணவர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, இன்று காலை (03) மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று மதகுகள் தானாகவே திறக்கப்பட்டுள்ளன என்று நீர்த்தேக்கப் பொறுப்புப் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மேலும் கனமழை பெய்தால், நீர்த்தேக்கத்தின் மீதமுள்ள மதகுகளும் தானாகவே திறக்கப்படும் என்பதால், நீர்த்தேக்க அணைக்குக் கீழ் உள்ள கொத்மலை ஓயாவின் இருபுறமும் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பேரிடர் மேலாண்மைப் பிரிவு தெரிவித்துள்ளது.
விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், அப்பகுதியில் பெய்த கனமழையால் செயின்ட் கிளேர் மற்றும் டெவன் நீர்வீழ்ச்சிகளின் நீர் கொள்ளளவும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இருவேறு பகுதிகளில் 55 குடும்பங்களைச் சேர்ந்த 118 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உரித்தான பிலக்வாட்டர் கெனில் வத்த பகுதியில் இரவு முழுவதும் பெய்த கடும் மழையினால் 26 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேர் இன்று (03) அதிகாலை பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கொட்டகலை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உரித்தான மேபில்ட் தோட்டத்தின் ரொப்கீல் பிரிவில் இன்று அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக 30 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இவ்வாறு இடம்பெயர்ந்த அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு (02) முதல் மத்திய உயர்நிலப்பகுதியின் மேற்குச் சரிவுகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, டெவன் அருவியில் கலக்கும் டெவன் கால்வாய் நிரம்பி வழிந்து, கொட்டகல வர்த்தகப் பகுதி மற்றும் லோகில் எஸ்டேட்டில் உள்ள 40 வீடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வீடுகளில் வசிப்பவர்கள் தற்காலிகமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை முதல் இன்று காலை வரையான 24 மணி நேரத்தில் நுவரெலியா மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அதன்படி, கங்க இஹல கோரளை பகுதியில் 196.6 மில்லிமீற்றர் மழையும், கிரிவன்னெளிய பகுதியில் 184.2 மில்லிமீற்றர் மழையும், அரநாயக்க பகுதியில் 182.6 மில்லிமீற்றர் மழையும், வட்டவளை பகுதியில் 163.2 மில்லிமீற்றர் மழையும் பதிவாகியுள்ளதாக காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால், பெருந்தோட்டப் பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீரில் மூழ்கிய வீதிகள்; திறக்கப்பட்ட வான் கதவுகள் 118 பேர் இடம்பெயர்வு சாய்ந்தமருது மற்றும் அதனைச் சுற்றியுள்ள உள்ளூர் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக, பல பிரதான மற்றும் உட்புற வீதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.நேற்று ஞாயிற்றுக்கிழமை (2) மாலை மழைநீரானது வடிகான்கள் வழியே முறையாக வழிந்தோட வழியின்மையினாலேயே பெரும்பாலான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.இதனால் பாதசாரிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் வாகனச் சாரதிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதோடு, அன்றாடக் காரியங்களை மேற்கொள்வதிலும் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.முறைசாரா வடிகான் அமைப்புகள் மற்றும் அடைபட்டுள்ள நீர்வரத்து வழிகளை உடனடியாகச் சீரமைத்து, தேங்கியுள்ள வெள்ளநீரை அகற்றுவதற்குப் பிரதேச சபையும் உரிய அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில் மகாவலி கங்கை பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தின் "சரசவி மெதுர" விடுதியின் கீழ் தளத்தில் தங்கியிருந்த மாணவர்கள், வெள்ளப் பெருக்கு காரணமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஏனைய மாணவர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.இதேவேளை மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, இன்று காலை (03) மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று மதகுகள் தானாகவே திறக்கப்பட்டுள்ளன என்று நீர்த்தேக்கப் பொறுப்புப் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மேலும் கனமழை பெய்தால், நீர்த்தேக்கத்தின் மீதமுள்ள மதகுகளும் தானாகவே திறக்கப்படும் என்பதால், நீர்த்தேக்க அணைக்குக் கீழ் உள்ள கொத்மலை ஓயாவின் இருபுறமும் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பேரிடர் மேலாண்மைப் பிரிவு தெரிவித்துள்ளது.விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.இதற்கிடையில், அப்பகுதியில் பெய்த கனமழையால் செயின்ட் கிளேர் மற்றும் டெவன் நீர்வீழ்ச்சிகளின் நீர் கொள்ளளவும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இருவேறு பகுதிகளில் 55 குடும்பங்களைச் சேர்ந்த 118 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உரித்தான பிலக்வாட்டர் கெனில் வத்த பகுதியில் இரவு முழுவதும் பெய்த கடும் மழையினால் 26 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேர் இன்று (03) அதிகாலை பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.இதேவேளை, கொட்டகலை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உரித்தான மேபில்ட் தோட்டத்தின் ரொப்கீல் பிரிவில் இன்று அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக 30 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.இவ்வாறு இடம்பெயர்ந்த அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நேற்று இரவு (02) முதல் மத்திய உயர்நிலப்பகுதியின் மேற்குச் சரிவுகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, டெவன் அருவியில் கலக்கும் டெவன் கால்வாய் நிரம்பி வழிந்து, கொட்டகல வர்த்தகப் பகுதி மற்றும் லோகில் எஸ்டேட்டில் உள்ள 40 வீடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வீடுகளில் வசிப்பவர்கள் தற்காலிகமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.இந்நிலையில், நேற்று காலை முதல் இன்று காலை வரையான 24 மணி நேரத்தில் நுவரெலியா மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.அதன்படி, கங்க இஹல கோரளை பகுதியில் 196.6 மில்லிமீற்றர் மழையும், கிரிவன்னெளிய பகுதியில் 184.2 மில்லிமீற்றர் மழையும், அரநாயக்க பகுதியில் 182.6 மில்லிமீற்றர் மழையும், வட்டவளை பகுதியில் 163.2 மில்லிமீற்றர் மழையும் பதிவாகியுள்ளதாக காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.தொடர்ந்து பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால், பெருந்தோட்டப் பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.