வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியின் மூன்றாவது நாள் இன்றாகும்.
இந்நிலையில் இன்று காலை முல்லைத்தீவிலிருந்து பேரணி ஆரம்பமாகியது.
தற்போது கொக்கிளாய் வீதிவழியாக சென்று அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்தி பின்னர் குறுந்தூர் மலை அடிவார வீதியூடாக ஆக்கிரமிப்புக்குள்ளான நீராவியடி ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட நிலையில் தற்போது திருமலையை அடைந்துள்ளது.
இவ்வாறானதொரு நிலையில் இந்தப் பேரணி கிழக்கில் திருகோணமலையில் நுழைந்த போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்களும் சிவில் சமூக அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து இப்பேரணியில் இணைந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் தற்போது கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் இந்த பேரணியை வரவேற்று ஆதரவை வழங்கி பேரணியில் இணைந்திருக்கின்றனர்.
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணிக்கு திருமலையில் பலத்த ஆதரவு வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியின் மூன்றாவது நாள் இன்றாகும்.இந்நிலையில் இன்று காலை முல்லைத்தீவிலிருந்து பேரணி ஆரம்பமாகியது.தற்போது கொக்கிளாய் வீதிவழியாக சென்று அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்தி பின்னர் குறுந்தூர் மலை அடிவார வீதியூடாக ஆக்கிரமிப்புக்குள்ளான நீராவியடி ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட நிலையில் தற்போது திருமலையை அடைந்துள்ளது.இவ்வாறானதொரு நிலையில் இந்தப் பேரணி கிழக்கில் திருகோணமலையில் நுழைந்த போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்களும் சிவில் சமூக அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து இப்பேரணியில் இணைந்து கொண்டிருந்தனர்.இந்நிலையில் தற்போது கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் இந்த பேரணியை வரவேற்று ஆதரவை வழங்கி பேரணியில் இணைந்திருக்கின்றனர்.