• Sep 21 2024

வீசிய கடும் காற்று; பொன்னாலையில் பிடுங்கி வீசப்பட்ட வீடு - 3 குடும்பங்கள் பாதிப்பு!

Chithra / Aug 9th 2024, 1:13 pm
image

Advertisement

 யாழ்ப்பாணம் -  சங்கானை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம், கல்விளான் பகுதியில்  வீசிய கடும் காற்றால் வீட்டின் கூரையொன்று தூக்கி எறியப்பட்டதையடுத்து, மூன்று குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன.

இச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.

மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது பேர் அந்த வீட்டில் வசித்துவந்த நிலையில், 

இந்த அனர்த்தம் காரணமாக, அவர்கள் சுழிபுரம் திருவடிநிலை சைவத் தமிழ்க் கலவன் பாடசாலையில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அசம்பாவிதம் இடம்பெற்ற வீட்டிலிருந்த குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன.


வீசிய கடும் காற்று; பொன்னாலையில் பிடுங்கி வீசப்பட்ட வீடு - 3 குடும்பங்கள் பாதிப்பு  யாழ்ப்பாணம் -  சங்கானை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம், கல்விளான் பகுதியில்  வீசிய கடும் காற்றால் வீட்டின் கூரையொன்று தூக்கி எறியப்பட்டதையடுத்து, மூன்று குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன.இச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது பேர் அந்த வீட்டில் வசித்துவந்த நிலையில், இந்த அனர்த்தம் காரணமாக, அவர்கள் சுழிபுரம் திருவடிநிலை சைவத் தமிழ்க் கலவன் பாடசாலையில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.அசம்பாவிதம் இடம்பெற்ற வீட்டிலிருந்த குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement