சென்னையில் சக மாணவிகளை ஆசை காட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள லாட்ஜ் ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விபசார தடுப்பு பிரிவு அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது லாட்ஜில் அறைகளை வாடகைக்கு எடுத்து பிரகாஷ் என்பவர் அழகிகளை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவரது காதலியான, புதுவை சிவராந்தகம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெயபிரதா என்ற 19 வயது பெண்ணுடன் சேர்ந்து பாலியல் தொழிலை நடத்தியமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அதை தொடர்ந்து ஜெயபிரதாவை பொலிசார் கைது செய்துள்ளனர். அத்தோடு விபசார தொழிலுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியதாக சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த பிரேம்தாஸ் என்ற வாலிபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிசாரிடம் பிடிபட்ட ஜெயபிரதா தனக்கு ஒன்றும் தெரியாது எனவும் நான் சாப்பாடு கொடுக்கவே வந்ததாகவும் கூறியதால் பொலிசார் அவரிடம் உரிய முறையில் விசாரணை நடத்தி செல்போனை வாங்கி ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஜி.பே.மூலம் பலர் பணம் செலுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும் கல்லூரியில் படித்து கொண்டே சக தோழிகளுக்கு பணத்தாசை காட்டி பாலியல் தொழிலில் தள்ளியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இந்த நிலையில், காதலி ஜெயபிரதா பொலிசாரின் வலையில் சிக்கியதை அறிந்த காதலன் பிரகாஷ் தலைமறைவாகிய நிலையில் பொலிசார் அவரை தேடி வருகிறனர்.
காதலனுடன் சேர்ந்து சக தோழிகளை வைத்து பாலியல் தொழில் செய்த மாணவி SamugamMedia சென்னையில் சக மாணவிகளை ஆசை காட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள லாட்ஜ் ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விபசார தடுப்பு பிரிவு அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது லாட்ஜில் அறைகளை வாடகைக்கு எடுத்து பிரகாஷ் என்பவர் அழகிகளை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரது காதலியான, புதுவை சிவராந்தகம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெயபிரதா என்ற 19 வயது பெண்ணுடன் சேர்ந்து பாலியல் தொழிலை நடத்தியமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதை தொடர்ந்து ஜெயபிரதாவை பொலிசார் கைது செய்துள்ளனர். அத்தோடு விபசார தொழிலுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியதாக சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த பிரேம்தாஸ் என்ற வாலிபரும் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிசாரிடம் பிடிபட்ட ஜெயபிரதா தனக்கு ஒன்றும் தெரியாது எனவும் நான் சாப்பாடு கொடுக்கவே வந்ததாகவும் கூறியதால் பொலிசார் அவரிடம் உரிய முறையில் விசாரணை நடத்தி செல்போனை வாங்கி ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஜி.பே.மூலம் பலர் பணம் செலுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.மேலும் கல்லூரியில் படித்து கொண்டே சக தோழிகளுக்கு பணத்தாசை காட்டி பாலியல் தொழிலில் தள்ளியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்த நிலையில், காதலி ஜெயபிரதா பொலிசாரின் வலையில் சிக்கியதை அறிந்த காதலன் பிரகாஷ் தலைமறைவாகிய நிலையில் பொலிசார் அவரை தேடி வருகிறனர்.