• Oct 19 2024

பாடசாலையினுள் மாணவர்கள் மீது தலைக்கவசத்தால் தாக்குதல்! samugammedia

Tamil nila / Apr 12th 2023, 6:43 pm
image

Advertisement

வெளியாட்கள் பாடசாலைக்குள் நுழைந்து பாடசாலை மாணவர்களை தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நேற்று (11) பிற்பகல் இந்த சம்பவம் அனுராதபுரம் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பாடசாலையின் உயர்தர மாணவர்களுக்கு நேற்று மேலதிக வகுப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போதே, குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரு மாணவர்கள் மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தால் கொடூரமாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த இரண்டு சிறுவர்களும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதல் சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாடசாலையினுள் மாணவர்கள் மீது தலைக்கவசத்தால் தாக்குதல் samugammedia வெளியாட்கள் பாடசாலைக்குள் நுழைந்து பாடசாலை மாணவர்களை தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.நேற்று (11) பிற்பகல் இந்த சம்பவம் அனுராதபுரம் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.குறித்த பாடசாலையின் உயர்தர மாணவர்களுக்கு நேற்று மேலதிக வகுப்பு இடம்பெற்றுள்ளது.இதன்போதே, குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இரு மாணவர்கள் மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தால் கொடூரமாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காயமடைந்த இரண்டு சிறுவர்களும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதல் சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement