• Jun 29 2025

எருவில்பற்றில் மாணவர்களின் கல்வித் தேவைகளுக்கு முன்னுரிமை!

shanuja / Jun 28th 2025, 11:44 pm
image

எருவில்பற்று பிரதேசசபைக்குட்பட்ட மாணவர்களின் கல்விக்குத் தேவையான விடயங்களுக்கு முடிந்தவரை முன்னுரிமை வழங்கப்படும் எருவில்பற்று பிரதேசசபை தெரிவித்துள்ளது. 


தனியார் கல்வி நிலையங்களின் உரிமையாளர்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்று  பிரதேச சபை ஒன்றுகூடல் மண்டபத்தில்  இன்று(28) நடைபெற்ற போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.


மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் உயர்தர மாணவர்களுக்கான வகுப்பு கட்டணம் 80 ரூபாவாகவும்  தரம் 06 - 11 வரையான மாணவர்களுக்கான கட்டணம் 50 ரூபாவாகவும் அறவிடப்படுகின்றது. 


மண்முனை தென் எருவில்பற்று பிரதேசசபையில் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளிலும்  பிரதேச சபையினால் இலவசமாக கல்வியை வழங்க ஆங்கில ஆசிரியர் நியமிக்கப்படுவார். 


மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் கல்விக்காக  முன்னெடுக்கப்படும் திட்டங்களால்  ஏழை மாணவர்களுக்கான வசதிகள் சுலபமாக்கப்பட வேண்டும் என்று எருவில்பற்று பிரதேசசபை தெரிவித்துள்ளது.

எருவில்பற்றில் மாணவர்களின் கல்வித் தேவைகளுக்கு முன்னுரிமை எருவில்பற்று பிரதேசசபைக்குட்பட்ட மாணவர்களின் கல்விக்குத் தேவையான விடயங்களுக்கு முடிந்தவரை முன்னுரிமை வழங்கப்படும் எருவில்பற்று பிரதேசசபை தெரிவித்துள்ளது. தனியார் கல்வி நிலையங்களின் உரிமையாளர்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்று  பிரதேச சபை ஒன்றுகூடல் மண்டபத்தில்  இன்று(28) நடைபெற்ற போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் உயர்தர மாணவர்களுக்கான வகுப்பு கட்டணம் 80 ரூபாவாகவும்  தரம் 06 - 11 வரையான மாணவர்களுக்கான கட்டணம் 50 ரூபாவாகவும் அறவிடப்படுகின்றது. மண்முனை தென் எருவில்பற்று பிரதேசசபையில் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளிலும்  பிரதேச சபையினால் இலவசமாக கல்வியை வழங்க ஆங்கில ஆசிரியர் நியமிக்கப்படுவார். மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் கல்விக்காக  முன்னெடுக்கப்படும் திட்டங்களால்  ஏழை மாணவர்களுக்கான வசதிகள் சுலபமாக்கப்பட வேண்டும் என்று எருவில்பற்று பிரதேசசபை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement