• Sep 23 2024

இலங்கையில் திடீரென அதிகரிக்கும் இறப்புக்கள்...! நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி...!samugammedia

Sharmi / Oct 30th 2023, 11:03 am
image

Advertisement

இலங்கையில் உயிரிழப்போரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகின்றது.

நாட்டில் கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்நிலைமை காணப்படுவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி,  2012 ஜூலை முதல் 2013 ஜூன் வரை இலங்கையில் பதிவான இறப்புகளின் எண்ணிக்கை 125,626 ஆக பதிவாகியுள்ளது.

அதேவேளை,  2022 ஜூன் முதல் 2023 ஜூன் வரை இலங்கையில் நிகழ்ந்த இறப்புகளின் எண்ணிக்கை 190,600 என்று தெரிவிக்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் நாட்டின் சராசரி ஆண்டு மக்கள் தொகை 144,345 ஆக குறைந்துள்ளதாகவும் அறிக்கைகள் காட்டுகின்றன.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் கூற்றுப்படி, பிறப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து,  உயிரிழப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது.

எவ்வாறாயினும், உயிரிழப்புக்கள் அதிகரித்து வருவதற்கான காரணம் கண்டறியப்படவில்லை.

அதேவேளை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் கொரோனா தொற்று பரவியதன் பின்னர் இந்த நிலைமை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொவிட் தடுப்பூசி குறித்து பல்வேறு தரப்பினரிடையே பல்வேறு கருத்துகள் இருந்தாலும், இது தொடர்பாக இதுவரை குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இலங்கையில் திடீரென அதிகரிக்கும் இறப்புக்கள். நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி.samugammedia இலங்கையில் உயிரிழப்போரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகின்றது.நாட்டில் கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்நிலைமை காணப்படுவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி,  2012 ஜூலை முதல் 2013 ஜூன் வரை இலங்கையில் பதிவான இறப்புகளின் எண்ணிக்கை 125,626 ஆக பதிவாகியுள்ளது.அதேவேளை,  2022 ஜூன் முதல் 2023 ஜூன் வரை இலங்கையில் நிகழ்ந்த இறப்புகளின் எண்ணிக்கை 190,600 என்று தெரிவிக்கப்படுகிறது.2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் நாட்டின் சராசரி ஆண்டு மக்கள் தொகை 144,345 ஆக குறைந்துள்ளதாகவும் அறிக்கைகள் காட்டுகின்றன.மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் கூற்றுப்படி, பிறப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து,  உயிரிழப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது.எவ்வாறாயினும், உயிரிழப்புக்கள் அதிகரித்து வருவதற்கான காரணம் கண்டறியப்படவில்லை.அதேவேளை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் கொரோனா தொற்று பரவியதன் பின்னர் இந்த நிலைமை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கொவிட் தடுப்பூசி குறித்து பல்வேறு தரப்பினரிடையே பல்வேறு கருத்துகள் இருந்தாலும், இது தொடர்பாக இதுவரை குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement