• Apr 30 2026

தோட்டத்தில் இருந்து திடீரென மாயமான லீக்ஸ்...! பொலிஸார் நடவடிக்கை...! samugammedia

Ziya / Jan 8th 2024, 11:38 am
image

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஓல்டன் தோட்ட 10 நம்பர் பிரிவில் நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் பயிரிடப்பட்டு அறுவடைக்காக இருந்த 300 கிலோ லீக்ஸ் களவாடி நோர்வூட் நகரில் விற்பனை செய்த இருவரை மஸ்கெலியா பொலிசார் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 6ம் திகதி இரவு கவரவலை தோட்டத்தில் வசிக்கும் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்ட போது தாங்கள் களவாடி நோர்வூட் நகரில் விற்பனை செய்ததை ஒப்புக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று சந்தேக நபர்கள் இருவரும் ஹட்டன் நீதிமன்ற பதில் நீதவான் விணாயகமூர்த்தி முன்னிலையில் ஆஜர்படுத்தபட்ட போது அவர்களை எதிர்வரும் 10 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்ததுள்ளார்.


தோட்டத்தில் இருந்து திடீரென மாயமான லீக்ஸ். பொலிஸார் நடவடிக்கை. samugammedia மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஓல்டன் தோட்ட 10 நம்பர் பிரிவில் நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் பயிரிடப்பட்டு அறுவடைக்காக இருந்த 300 கிலோ லீக்ஸ் களவாடி நோர்வூட் நகரில் விற்பனை செய்த இருவரை மஸ்கெலியா பொலிசார் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,கடந்த 6ம் திகதி இரவு கவரவலை தோட்டத்தில் வசிக்கும் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்ட போது தாங்கள் களவாடி நோர்வூட் நகரில் விற்பனை செய்ததை ஒப்புக் கொண்டனர்.அதனைத் தொடர்ந்து நேற்று சந்தேக நபர்கள் இருவரும் ஹட்டன் நீதிமன்ற பதில் நீதவான் விணாயகமூர்த்தி முன்னிலையில் ஆஜர்படுத்தபட்ட போது அவர்களை எதிர்வரும் 10 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்ததுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement