பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் நடவடிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாட்டை விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட மூவர் குழுவிலிருந்து கயந்த கருணாதிலக்க விலகியுள்ளார்.
பாராளுமன்ற அலுவல்கள் இன்று (6) ஆரம்பித்த போது சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இதனை பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அதன்படி, எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் கயந்த கருணாதிலக்கவுக்குப் பதிலாக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகரவின் நடத்தை தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை கருத்தில் கொண்டு, கடந்த மே 20 ஆம் திகதி இந்த மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.
திடீரென விலகிய கயந்த கருணாதிலக்க எம்.பி. - சபாநாயகர் அறிவிப்பு பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் நடவடிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாட்டை விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட மூவர் குழுவிலிருந்து கயந்த கருணாதிலக்க விலகியுள்ளார்.பாராளுமன்ற அலுவல்கள் இன்று (6) ஆரம்பித்த போது சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இதனை பாராளுமன்றத்தில் அறிவித்தார். அதன்படி, எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் கயந்த கருணாதிலக்கவுக்குப் பதிலாக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார். பாராளுமன்றத்தில் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகரவின் நடத்தை தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை கருத்தில் கொண்டு, கடந்த மே 20 ஆம் திகதி இந்த மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.