இரகசிய பண பரிவர்த்தனைகள் மூலம் கைதிகளை சட்டவிரோதமாக விடுவிப்பது முறையான முறையில் விடுவிக்கப்படவுள்ள கைதிகளுக்கு பெரும் அநீதி என கைதிகள் உரிமைகள் பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுதேஷ் நந்திமால் சில்வா தெரிவித்தார்.
இன்று(09) குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு அளிக்க வந்தபோது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
சிறைச்சாலையின் மூத்த அதிகாரிகள் எப்போதும் ஊழல் செயல்களைச் செய்துள்ளனர்.
சுமார் 20-25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கைதிகள் ஜனாதிபதி மன்னிப்புக்கு தகுதியானவர்கள் என்றும், மூத்த சிறைச்சாலை அதிகாரிகள் அவர்களை விடுவிக்க அனுமதிப்பதில்லை என்றும் சுதேஷ் நந்திமால் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில், சிறைச்சாலை அதிகாரிகள் ஜனாதிபதியை கூட தவறாக வழிநடத்தி இந்தச் செயலைச் செய்துள்ளதாகவும், மூத்த அதிகாரிகள் மீது சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதியை தவறாக வழிநடத்திய சிறைச்சாலை அதிகாரிகள்- சுதேஷ் நந்திமால் சில்வா குற்றச்சாட்டு. இரகசிய பண பரிவர்த்தனைகள் மூலம் கைதிகளை சட்டவிரோதமாக விடுவிப்பது முறையான முறையில் விடுவிக்கப்படவுள்ள கைதிகளுக்கு பெரும் அநீதி என கைதிகள் உரிமைகள் பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுதேஷ் நந்திமால் சில்வா தெரிவித்தார்.இன்று(09) குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு அளிக்க வந்தபோது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,சிறைச்சாலையின் மூத்த அதிகாரிகள் எப்போதும் ஊழல் செயல்களைச் செய்துள்ளனர்.சுமார் 20-25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கைதிகள் ஜனாதிபதி மன்னிப்புக்கு தகுதியானவர்கள் என்றும், மூத்த சிறைச்சாலை அதிகாரிகள் அவர்களை விடுவிக்க அனுமதிப்பதில்லை என்றும் சுதேஷ் நந்திமால் தெரிவித்தார்.இந்த சம்பவத்தில், சிறைச்சாலை அதிகாரிகள் ஜனாதிபதியை கூட தவறாக வழிநடத்தி இந்தச் செயலைச் செய்துள்ளதாகவும், மூத்த அதிகாரிகள் மீது சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.