• Jun 18 2025

யாழ்.மாவட்டத்திற்கு போதியளவு பெற்றோல் விநியோகம்..! - யாழ்.மாவட்டச்செயலர் தெரிவிப்பு..!

shanuja / Jun 18th 2025, 8:40 am
image


யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள அனைத்து பெற்றோல் நிலையங்களுக்கும் போதியளவிலான பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளது என்று யாழ்.மாவட்டச்செயலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். 


இது தொடர்பில் யாழ்.மாவட்டச்செயலகத்தின் ஊடகப் நேற்று(17) அனுப்பிவைக்கப்பட்ட ஊடக அறிக்கையில் உள்ளதாவது,  


யாழ்ப்பாண மாவட்டத்திற்கு சராசரியாக ஒரு நாளைக்கு 115,000 லீற்றர் பெற்றோல் தேவை என கணிக்கப்பட்ட நிலையில் இன்று (17)  யாழ்ப்பாணத்தின்  குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 264,000 லீற்றர் பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளது. 


நாளை (இன்று- 18) மேலும் சில எரிபொருள் நிலையங்களுக்கு வட பிராந்திய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் 250,800 லீற்றர் பெற்றோல் விநியோகிக்கப்படவுள்ளது. 


அதற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் போதியளவு விநியோகிக்கப்பட்டுள்ளது என யாழ்ப்பாண மாவட்டச்செயலர் தெரிவித்துள்ளார். -  என்றுள்ளது.


யாழ்.மாவட்டத்திற்கு போதியளவு பெற்றோல் விநியோகம். - யாழ்.மாவட்டச்செயலர் தெரிவிப்பு. யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள அனைத்து பெற்றோல் நிலையங்களுக்கும் போதியளவிலான பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளது என்று யாழ்.மாவட்டச்செயலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் யாழ்.மாவட்டச்செயலகத்தின் ஊடகப் நேற்று(17) அனுப்பிவைக்கப்பட்ட ஊடக அறிக்கையில் உள்ளதாவது,  யாழ்ப்பாண மாவட்டத்திற்கு சராசரியாக ஒரு நாளைக்கு 115,000 லீற்றர் பெற்றோல் தேவை என கணிக்கப்பட்ட நிலையில் இன்று (17)  யாழ்ப்பாணத்தின்  குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 264,000 லீற்றர் பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளது. நாளை (இன்று- 18) மேலும் சில எரிபொருள் நிலையங்களுக்கு வட பிராந்திய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் 250,800 லீற்றர் பெற்றோல் விநியோகிக்கப்படவுள்ளது. அதற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் போதியளவு விநியோகிக்கப்பட்டுள்ளது என யாழ்ப்பாண மாவட்டச்செயலர் தெரிவித்துள்ளார். -  என்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement