• Mar 17 2025

சகல உள்ளூராட்சி மன்றங்களிலும் தமிழரசு ஆட்சியைக் கைப்பற்றும் - சுமந்திரன் நம்பிக்கை

Thansita / Mar 16th 2025, 9:49 pm
image

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி போட்டியிடுகின்ற சகல உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சியைக் கைப்பற்றும் என இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நியமனங்கள் தொடர்பான கலந்துரையாடல் 16.03.2025 இன்று முல்லைத்தீவு கள்ளப்பாடுபகுதியில் இடம்பெற்றது.

இதன்போது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருமான துரைராசா ரவிகரன் பொன்னாடைபோர்த்தி மதிப்பளித்தார்.

இக்கலந்துரையாடலின் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்  மேலும் கருத்துத் தெரிவிக்கையில்

சில இடங்களில் வேட்பாளர் நியமனங்களில் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, பெரும்பாலும் வேட்பாளர் நியமனங்கள் தொடர்பான முடிவுகள் எய்தப்பட்டிருக்கின்றன.

எனவே மிகவிரைவாக அடுத்தவாரம் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளார் 

அந்தவகையில் போட்டியிடுகின்ற அனைத்து உள்ளூராட்சி சபைகளையும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி கைப்பற்றும் என்ற நம்பிக்கையிருக்கின்றது - என்றார்.

சகல உள்ளூராட்சி மன்றங்களிலும் தமிழரசு ஆட்சியைக் கைப்பற்றும் - சுமந்திரன் நம்பிக்கை இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி போட்டியிடுகின்ற சகல உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சியைக் கைப்பற்றும் என இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நியமனங்கள் தொடர்பான கலந்துரையாடல் 16.03.2025 இன்று முல்லைத்தீவு கள்ளப்பாடுபகுதியில் இடம்பெற்றது.இதன்போது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருமான துரைராசா ரவிகரன் பொன்னாடைபோர்த்தி மதிப்பளித்தார்.இக்கலந்துரையாடலின் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இந்நிலையில்  மேலும் கருத்துத் தெரிவிக்கையில்சில இடங்களில் வேட்பாளர் நியமனங்களில் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, பெரும்பாலும் வேட்பாளர் நியமனங்கள் தொடர்பான முடிவுகள் எய்தப்பட்டிருக்கின்றன.எனவே மிகவிரைவாக அடுத்தவாரம் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளார் அந்தவகையில் போட்டியிடுகின்ற அனைத்து உள்ளூராட்சி சபைகளையும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி கைப்பற்றும் என்ற நம்பிக்கையிருக்கின்றது - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement