• Jul 27 2024

தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் ஜூன் 9 இல் பகிரங்கக் கருத்துப் பரிமாற்றம் - சுமந்திரன் தகவல்

Tamil nila / May 27th 2024, 8:42 pm
image

Advertisement

"ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் சம்பந்தமாக எதிர்வரும் ஜூன் மாதம் 9 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பொது வெளியில் பகிரங்கமாக ஆரோக்கியமான முறையில் கருத்துப் பரிமாற்றம் நடைபெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன்."

- இவ்வாறு யாழ். ஊடக அமையத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறியதாவது:-

"கடந்த சில நாட்களுக்கு முன்னதாக யாழ்ப்பாணத்தில் சந்திப்பொன்றை நான் மேற்கொண்டிருந்தேன். அதாவது தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது சம்பந்தமாக முனைப்பாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற சிவில் சமூகத்தினர், பத்தி எழுத்தாளர்கள் என்னைச் சந்திக்க வேண்டுமெனக் கேட்டிருந்தார்கள். அவர்களோடு நிறைவான கருத்துமிக்க கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

தமிழ்ப் பொது வேட்பாளர் யோசனைக்கு மாறாக நான் தெரிவித்த கருத்துக்கள் சம்பந்தமாக அதனுடைய காரணங்களை எடுத்துச் சொல்லியிருந்தேன். இந்தச் சூழ்நிலையிலே இப்படியானதொரு முன்னெடுப்பு செய்வதற்கான தங்களுடைய காரணங்களையும் அவர்கள் எங்களுக்கு எடுத்துச் சொல்லியிருந்தார்கள்.

அந்தக் கூட்டத்தின் இறுதியில் இந்த விடயம் சம்பந்தமாக நாங்கள் பொது வெளியில் பகிரங்கமாக ஆரோக்கியமான முறையிலே கருத்துப் பரிமாற்றம் செய்வது நல்லது என்கின்ற என்னுடைய யோசனையை  நான் சொன்னபோது அவர்களும் அதனை முழு மனதோடு ஏற்றுக்கொண்டார்கள்.

சென்ற வாரம் அல்லது நேற்றைய தினம் அப்படியொரு கூட்டத்தை ஒழுங்கு செய்ய நான் நினைத்திருந்தாலும் கூட சில பல காரணங்களினாலே அது பிற்போடப்பட்டிருக்கிறது.

இப்போது வருகின்ற ஜூன் மாதம் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலையில் யாழ்ப்பாணத்தில் பாரியளவிலான கூட்டமொன்று இரு தரப்பு நியாயங்களையும் ஆரோக்கியமான முறையில் கலந்துரையாடும் வகையில் செய்வதற்கு நான் ஒழுங்கு செய்திருக்கின்றேன்.

இரு தரப்பில் இருந்தும் சிலரை அந்தக் கட்டத்தில் தங்களுடைய கருத்துக்களை முன்வைக்குமாறு அழைப்பு விடுத்திருக்கின்றேன்.

அப்படியான உரையாடல் நடைபெறுவது நல்லது. ஏனென்றால் பொது மக்களுக்கும் இதனுடைய சாதக பாதகங்களை அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். இதைக் குறித்து மக்களுடைய மனதிலே எப்படியான சிந்தனைகள் இருக்கின்றதென்பதையும் நாங்களும் ஒரு அளவுகோலிட்டு அறியக் கூடியதாக இருக்கும்.

ஆகவே, ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசாமல் இதற்குப் பின்னணியில் இது இருக்கின்றது, அதற்குப் பின்னணியில் அது இருக்கின்றது என்ற இந்தப் பின்னணிக் கதைகள் எல்லாம் விடுத்து சரியான விதத்தில் ஒரு கருத்துப் பரிமாற்றம் செய்வது நல்லது. அதற்கான ஒரு சூழலை நாங்கள் உருவாக்குகின்றோம். எனவே, தயவுகூர்ந்து அனைவரும் அந்த ஒரு ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்ற சூழலைப் பேணுமாறு மிகவும் அன்போடு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படியான விடயங்களிலே நாங்கள் எடுக்கின்ற தீர்மானங்கள் மக்கள் சார்ந்ததாக இருக்க வேண்டும். அதிலே மக்களுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும். ஆகவே, இந்த விடயத்தை நாங்கள் ஒரு முன்னுதாரணமாக  வைத்து ஐனநாயக வழியிலே எப்படியான கருத்துப் பரிமாற்றங்களை வெளிப்படைத் தன்மையோடு பேச முடியும் என்பதையும் இதன் மூலம் நாங்கள் வெளிப்படுத்த முடியும். ஆகையினாலே அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்தக் கலந்துரையாடலில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன்." - என்றார்.


தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் ஜூன் 9 இல் பகிரங்கக் கருத்துப் பரிமாற்றம் - சுமந்திரன் தகவல் "ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் சம்பந்தமாக எதிர்வரும் ஜூன் மாதம் 9 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பொது வெளியில் பகிரங்கமாக ஆரோக்கியமான முறையில் கருத்துப் பரிமாற்றம் நடைபெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன்."- இவ்வாறு யாழ். ஊடக அமையத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.இதன்போது அவர் மேலும் கூறியதாவது:-"கடந்த சில நாட்களுக்கு முன்னதாக யாழ்ப்பாணத்தில் சந்திப்பொன்றை நான் மேற்கொண்டிருந்தேன். அதாவது தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது சம்பந்தமாக முனைப்பாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற சிவில் சமூகத்தினர், பத்தி எழுத்தாளர்கள் என்னைச் சந்திக்க வேண்டுமெனக் கேட்டிருந்தார்கள். அவர்களோடு நிறைவான கருத்துமிக்க கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.தமிழ்ப் பொது வேட்பாளர் யோசனைக்கு மாறாக நான் தெரிவித்த கருத்துக்கள் சம்பந்தமாக அதனுடைய காரணங்களை எடுத்துச் சொல்லியிருந்தேன். இந்தச் சூழ்நிலையிலே இப்படியானதொரு முன்னெடுப்பு செய்வதற்கான தங்களுடைய காரணங்களையும் அவர்கள் எங்களுக்கு எடுத்துச் சொல்லியிருந்தார்கள்.அந்தக் கூட்டத்தின் இறுதியில் இந்த விடயம் சம்பந்தமாக நாங்கள் பொது வெளியில் பகிரங்கமாக ஆரோக்கியமான முறையிலே கருத்துப் பரிமாற்றம் செய்வது நல்லது என்கின்ற என்னுடைய யோசனையை  நான் சொன்னபோது அவர்களும் அதனை முழு மனதோடு ஏற்றுக்கொண்டார்கள்.சென்ற வாரம் அல்லது நேற்றைய தினம் அப்படியொரு கூட்டத்தை ஒழுங்கு செய்ய நான் நினைத்திருந்தாலும் கூட சில பல காரணங்களினாலே அது பிற்போடப்பட்டிருக்கிறது.இப்போது வருகின்ற ஜூன் மாதம் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலையில் யாழ்ப்பாணத்தில் பாரியளவிலான கூட்டமொன்று இரு தரப்பு நியாயங்களையும் ஆரோக்கியமான முறையில் கலந்துரையாடும் வகையில் செய்வதற்கு நான் ஒழுங்கு செய்திருக்கின்றேன்.இரு தரப்பில் இருந்தும் சிலரை அந்தக் கட்டத்தில் தங்களுடைய கருத்துக்களை முன்வைக்குமாறு அழைப்பு விடுத்திருக்கின்றேன்.அப்படியான உரையாடல் நடைபெறுவது நல்லது. ஏனென்றால் பொது மக்களுக்கும் இதனுடைய சாதக பாதகங்களை அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். இதைக் குறித்து மக்களுடைய மனதிலே எப்படியான சிந்தனைகள் இருக்கின்றதென்பதையும் நாங்களும் ஒரு அளவுகோலிட்டு அறியக் கூடியதாக இருக்கும்.ஆகவே, ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசாமல் இதற்குப் பின்னணியில் இது இருக்கின்றது, அதற்குப் பின்னணியில் அது இருக்கின்றது என்ற இந்தப் பின்னணிக் கதைகள் எல்லாம் விடுத்து சரியான விதத்தில் ஒரு கருத்துப் பரிமாற்றம் செய்வது நல்லது. அதற்கான ஒரு சூழலை நாங்கள் உருவாக்குகின்றோம். எனவே, தயவுகூர்ந்து அனைவரும் அந்த ஒரு ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்ற சூழலைப் பேணுமாறு மிகவும் அன்போடு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.இப்படியான விடயங்களிலே நாங்கள் எடுக்கின்ற தீர்மானங்கள் மக்கள் சார்ந்ததாக இருக்க வேண்டும். அதிலே மக்களுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும். ஆகவே, இந்த விடயத்தை நாங்கள் ஒரு முன்னுதாரணமாக  வைத்து ஐனநாயக வழியிலே எப்படியான கருத்துப் பரிமாற்றங்களை வெளிப்படைத் தன்மையோடு பேச முடியும் என்பதையும் இதன் மூலம் நாங்கள் வெளிப்படுத்த முடியும். ஆகையினாலே அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்தக் கலந்துரையாடலில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement