• May 02 2024

செங்கலடி மத்திய கல்லூரியின் 20வது அதிபராக சுவர்ணேஸ்வரன் பதவியேற்பு...!

Sharmi / Mar 15th 2024, 3:45 pm
image

Advertisement

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரின் 20 வது அதிபராக க.சுவர்ணேஸ்வரன் இன்று(15) பதவியேற்றார். 

இன்று காலை நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் புதிய அதிபர் க.சுவர்ணேஸ்வரன், பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்தியம் முழங்க அதிதிகள் சகிதம் மலர்மாலை அணிவித்து வெகு விமர்சையாக வரவேற்கப்பட்டார். 

இதன்போது பாடசாலையின் சரஸ்வதி சிலையில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று, மும்மத மதகுருமாரின் ஆசியுடன் சுப வேளையில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார். 

இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொதுமேலாளர். சுவாமி சிறிமத்.நீலமாதவாணந்தாஜீ மகராஜ், செங்கலடி இந்து மதகுருமார் ஒன்றிய குருமார், கிரான் மெதடிஸ்த திருச்சபையின் போதகர், ஏறாவூர் கோட்டக்கல்வி அலுவலக திட்டமிடல் பணிப்பாளர் ஈ.தட்சணாமூர்த்தி , மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா பாடசாலைச் சமூகம், செங்கலடி மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர் சங்கத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


செங்கலடி மத்திய கல்லூரியின் 20வது அதிபராக சுவர்ணேஸ்வரன் பதவியேற்பு. மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரின் 20 வது அதிபராக க.சுவர்ணேஸ்வரன் இன்று(15) பதவியேற்றார். இன்று காலை நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் புதிய அதிபர் க.சுவர்ணேஸ்வரன், பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்தியம் முழங்க அதிதிகள் சகிதம் மலர்மாலை அணிவித்து வெகு விமர்சையாக வரவேற்கப்பட்டார். இதன்போது பாடசாலையின் சரஸ்வதி சிலையில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று, மும்மத மதகுருமாரின் ஆசியுடன் சுப வேளையில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார். இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொதுமேலாளர். சுவாமி சிறிமத்.நீலமாதவாணந்தாஜீ மகராஜ், செங்கலடி இந்து மதகுருமார் ஒன்றிய குருமார், கிரான் மெதடிஸ்த திருச்சபையின் போதகர், ஏறாவூர் கோட்டக்கல்வி அலுவலக திட்டமிடல் பணிப்பாளர் ஈ.தட்சணாமூர்த்தி , மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா பாடசாலைச் சமூகம், செங்கலடி மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர் சங்கத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement