• Oct 01 2024

கடற்றொழிலாளர் சமூகத்தை வாழவைக்க நடவடிக்கை எடுங்கள்..!

Sharmi / Sep 30th 2024, 11:12 am
image

Advertisement

ஜனாதிபதி இலஞ்சம், ஊழல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைப் போன்று எம் மீனவர்களையும், கடலையும் காப்பாற்ற வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் உப தலைவரும், வடமாகாண கூட்டுறவு சங்கத்தின் உப தலைவருமான வி.அருள்நாதன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில்  இன்றையதினம்(30) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

புதிதாக வந்திருக்கும் ஜனாதிபதிக்கு முல்லைத்தீவு மீனவ மக்கள் சார்பில் நல்லமுறையில் நாட்டை கொண்டு செல்வதற்காக வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கின்றோம்.

கடற்தொழிலில் அதிகமான வளத்தை கொண்டிக்கும் இறால் தொழில்  முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. 

இத் தொழிலிற்கு இடையூறாக இருந்தது இந்தியன் இழுவை படகு. கடலடி நேரத்தில் நாங்கள் தொழிலுக்கு செல்லாமல் இருக்கும் போது  50 மேற்பட்ட படகுகளை கொண்டுவந்து எமது வாழ்வாதாரத்தை சுரண்டும் நிலை இருந்தது. இதற்கு முன்னரும் இப்படிநடந்தது. அதற்கு முன்னாள் கடற்துறை அமைச்சரிடம் வைத்த கோரிக்கைக்கு அமைவாக அத்துமீறி நுழைபவர்கள் கைது செய்யப்பட்டு கொண்டிருக்கின்றார்கள். 

தற்பொழுது கடற்துறை அமைச்சராக இருப்பது  ஜனாதிபதி இருப்பதானால் நாம் சில கோரிக்கைகளை  முன்வைக்கின்றோம். காரணம்  இந்தியன் இழுவைபடகுகள் மட்டுமல்ல , சட்டவிரோத மீன்பிடி தொழில்கள் , அங்கீகரிக்கப்நடாத தொழில்கள் எமது கடற்பகுதிகளில் செய்கிறார்கள், இரவு பகுதிகளில் சுருக்குவலை, டைனமிற் பயன்படுத்தபடுகின்றது. இதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. 

ஆகவே ஜனாதிபதி இலஞ்சம், ஊழல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்றார்.அதே போன்று எம் மீனவர்களையும், கடலையும் காப்பாற்றவேண்டும்.

அத்தோடு சட்டவிரோத தொழிலை நிறுத்தி  சட்டத்திற்குட்பட்ட தொழிலை செய்ய  நடவடிக்கை எடுக்கவேண்டும். 

முன்னாள் கடற்றொழில் அமைச்சருக்கு நாம் கொடுத்த அழுத்தத்தில் 30%  சட்டவிரோத தொழில் நிறுத்தப்பட்டுள்ளது. அத்தோடு நீரியல் திணைக்களத்தினரும்  நல்ல முறையில் செயற்பட்டிருக்கின்றார்கள்.

இன்றும் கடலில் சட்டவிரோத சுருக்குவலை அதிகமாக பயன்படுத்துகின்றார்கள். ஆகவே ஜனாதிபதி இதனை கவனமெடுத்து செயற்படவேண்டும் என  முற்கூட்டியே நாம் கோரிக்கை வைக்கின்றோம்.

ஆகவே எமக்கு நல்ல கடற்தொழில் அமைச்சரை நியமிக்கவேண்டும்.அவருக்கு முல்லைத்தீவு மீனவ மக்கள் ஒத்துழைப்போம்.

எமது கடடற்படையினல் கடல் எல்லைகளில் எவ்வாறு காவல் இருக்கின்றார்களோ அவ்வாறே  இந்திய  கடற்படையினரும் எல்லைகளில் காவலிருக்க வேண்டும். 

அங்கிருக்கும் எம்.பி மார்களின் படகுகள் தான் இங்கே வருகின்றது. 

ஆகவே, எமக்கு நல்ல ஜனாதிபதி வந்திருக்கின்றார். ஆகவே எமது பிரச்சினையை தீர்ப்பார் என நம்புகின்றோம் என மேலும் தெரிவித்தார் 

கடற்றொழிலாளர் சமூகத்தை வாழவைக்க நடவடிக்கை எடுங்கள். ஜனாதிபதி இலஞ்சம், ஊழல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைப் போன்று எம் மீனவர்களையும், கடலையும் காப்பாற்ற வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் உப தலைவரும், வடமாகாண கூட்டுறவு சங்கத்தின் உப தலைவருமான வி.அருள்நாதன் தெரிவித்தார்.முல்லைத்தீவு ஊடக அமையத்தில்  இன்றையதினம்(30) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,புதிதாக வந்திருக்கும் ஜனாதிபதிக்கு முல்லைத்தீவு மீனவ மக்கள் சார்பில் நல்லமுறையில் நாட்டை கொண்டு செல்வதற்காக வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கின்றோம்.கடற்தொழிலில் அதிகமான வளத்தை கொண்டிக்கும் இறால் தொழில்  முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. இத் தொழிலிற்கு இடையூறாக இருந்தது இந்தியன் இழுவை படகு. கடலடி நேரத்தில் நாங்கள் தொழிலுக்கு செல்லாமல் இருக்கும் போது  50 மேற்பட்ட படகுகளை கொண்டுவந்து எமது வாழ்வாதாரத்தை சுரண்டும் நிலை இருந்தது. இதற்கு முன்னரும் இப்படிநடந்தது. அதற்கு முன்னாள் கடற்துறை அமைச்சரிடம் வைத்த கோரிக்கைக்கு அமைவாக அத்துமீறி நுழைபவர்கள் கைது செய்யப்பட்டு கொண்டிருக்கின்றார்கள். தற்பொழுது கடற்துறை அமைச்சராக இருப்பது  ஜனாதிபதி இருப்பதானால் நாம் சில கோரிக்கைகளை  முன்வைக்கின்றோம். காரணம்  இந்தியன் இழுவைபடகுகள் மட்டுமல்ல , சட்டவிரோத மீன்பிடி தொழில்கள் , அங்கீகரிக்கப்நடாத தொழில்கள் எமது கடற்பகுதிகளில் செய்கிறார்கள், இரவு பகுதிகளில் சுருக்குவலை, டைனமிற் பயன்படுத்தபடுகின்றது. இதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஆகவே ஜனாதிபதி இலஞ்சம், ஊழல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்றார்.அதே போன்று எம் மீனவர்களையும், கடலையும் காப்பாற்றவேண்டும்.அத்தோடு சட்டவிரோத தொழிலை நிறுத்தி  சட்டத்திற்குட்பட்ட தொழிலை செய்ய  நடவடிக்கை எடுக்கவேண்டும். முன்னாள் கடற்றொழில் அமைச்சருக்கு நாம் கொடுத்த அழுத்தத்தில் 30%  சட்டவிரோத தொழில் நிறுத்தப்பட்டுள்ளது. அத்தோடு நீரியல் திணைக்களத்தினரும்  நல்ல முறையில் செயற்பட்டிருக்கின்றார்கள்.இன்றும் கடலில் சட்டவிரோத சுருக்குவலை அதிகமாக பயன்படுத்துகின்றார்கள். ஆகவே ஜனாதிபதி இதனை கவனமெடுத்து செயற்படவேண்டும் என  முற்கூட்டியே நாம் கோரிக்கை வைக்கின்றோம்.ஆகவே எமக்கு நல்ல கடற்தொழில் அமைச்சரை நியமிக்கவேண்டும்.அவருக்கு முல்லைத்தீவு மீனவ மக்கள் ஒத்துழைப்போம்.எமது கடடற்படையினல் கடல் எல்லைகளில் எவ்வாறு காவல் இருக்கின்றார்களோ அவ்வாறே  இந்திய  கடற்படையினரும் எல்லைகளில் காவலிருக்க வேண்டும். அங்கிருக்கும் எம்.பி மார்களின் படகுகள் தான் இங்கே வருகின்றது. ஆகவே, எமக்கு நல்ல ஜனாதிபதி வந்திருக்கின்றார். ஆகவே எமது பிரச்சினையை தீர்ப்பார் என நம்புகின்றோம் என மேலும் தெரிவித்தார் 

Advertisement

Advertisement

Advertisement