• Jun 19 2025

கற்பிட்டி பிரதேச சபையின் தலைவர், உப தலைவர் கடமைகளை பொறுப்பேற்பு

Chithra / Jun 19th 2025, 3:22 pm
image

 

கற்பிட்டி பிரதேச  சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஏ.எஸ்.எம். ரிகாஸ் மற்றும் உபதலைவர் எச்.எம்.சமன் குமார ஆகியோர் தமது கடமைகளை இன்று (19) உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

கற்பிட்டி பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை (16) மாலை இடம்பெற்ற புதிய தலைவர் மற்றும் உப தலைவர் ஆகியோரை தேர்வு செய்யும் கூட்ட அமர்வில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரான ஏ.எஸ்.எம்.ரிகாஸ், 16 உறுப்பினர்களின் ஆதரவினைப் பெற்று, கற்பிட்டி பிரதேச சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


மேலும், கற்பிட்டி பிரதேச சபையின் பிரதி தலைவர் தேர்வில்  17 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று  எச்.எம்.சமன் குமார, பிரதேச சபையின் உப தலைவராக தெரிவானார்.

இந்த நிலையில், கற்பிட்டி பிரதேச சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஏ.எஸ்.எம்.ரிகாஸ் மற்றும் பிரதித் தலைவர் எச்.எம்.சமன் குமார ஆகியோர் கற்பிட்டி பிரதேச சபையின் செயலாளர் மங்கள ராமநாயக்க  முன்னிலையில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசல் உட்பட தலைவர் தெரிவுக்கு ஆதரவு வழங்கிய கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

கற்பிட்டி பிரதேச சபையின் தலைவர், உப தலைவர் கடமைகளை பொறுப்பேற்பு  கற்பிட்டி பிரதேச  சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஏ.எஸ்.எம். ரிகாஸ் மற்றும் உபதலைவர் எச்.எம்.சமன் குமார ஆகியோர் தமது கடமைகளை இன்று (19) உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.கற்பிட்டி பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.கடந்த திங்கட்கிழமை (16) மாலை இடம்பெற்ற புதிய தலைவர் மற்றும் உப தலைவர் ஆகியோரை தேர்வு செய்யும் கூட்ட அமர்வில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரான ஏ.எஸ்.எம்.ரிகாஸ், 16 உறுப்பினர்களின் ஆதரவினைப் பெற்று, கற்பிட்டி பிரதேச சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.மேலும், கற்பிட்டி பிரதேச சபையின் பிரதி தலைவர் தேர்வில்  17 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று  எச்.எம்.சமன் குமார, பிரதேச சபையின் உப தலைவராக தெரிவானார்.இந்த நிலையில், கற்பிட்டி பிரதேச சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஏ.எஸ்.எம்.ரிகாஸ் மற்றும் பிரதித் தலைவர் எச்.எம்.சமன் குமார ஆகியோர் கற்பிட்டி பிரதேச சபையின் செயலாளர் மங்கள ராமநாயக்க  முன்னிலையில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசல் உட்பட தலைவர் தெரிவுக்கு ஆதரவு வழங்கிய கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement