தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இன்று (19) சபையின் சபா மண்டபத்தில் இடம் பெற்றது.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற தவிசாளர் தெரிவில், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எட்டு வாக்குகளால் எச்.தாலிப் அலி திறந்த வாக்கெடுப்பு மூலமாக தவிசாளராக தெரிவானார்.
மொத்தமாக 16 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் தேசிய மக்கள் சக்தி சார்பில் 3, ஐக்கிய மக்கள் சக்தி 3, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 2, இலங்கை தமிழரசு கட்சி 2, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 2, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பொதுஜன ஐக்கிய முண்ணனி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முண்ணனி தலா ஒருவரும் அடங்குவர். மூவின சமூகங்களை சேர்ந்தவர்கள் இச் சபையில் அங்கம் வகிக்கின்றனர்.
தவிசாளர் தெரிவில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் சார்பில் எச்.தாலிப் அலியும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் எஸ்.எம்.சுபியான் மற்றும் தேசிய மக்கள் சக்தி சார்பில் நஜிபுள்ளாவும் போட்டியிட்டனர்.
இதில் திறந்த வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தி சபையை கைப்பற்றியது.
குறித்த சபையில் உப தவிசாளராக விஜயானந்தம் விஜய குமார் திறந்த வாக்கெடுப்பு மூலமாக தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிலையில் பிங்கிரிய பிரதேச சபைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றபோது பெரும்பான்மையைப் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் கமல் விஸ்வநாத் இன்று பிங்கிரிய பிரதேச சபையின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அத்தோடுபாத்தஹேவாஹெட்ட பிரதேச சபையின் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றபோது பெரும்பான்மையைப் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் ராஜநாயக்க இன்று பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபையின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தம்பலகாமம் பிரதேச சபை ஐக்கிய மக்கள் சக்தி வசம் தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இன்று (19) சபையின் சபா மண்டபத்தில் இடம் பெற்றது. கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற தவிசாளர் தெரிவில், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எட்டு வாக்குகளால் எச்.தாலிப் அலி திறந்த வாக்கெடுப்பு மூலமாக தவிசாளராக தெரிவானார். மொத்தமாக 16 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் தேசிய மக்கள் சக்தி சார்பில் 3, ஐக்கிய மக்கள் சக்தி 3, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 2, இலங்கை தமிழரசு கட்சி 2, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 2, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பொதுஜன ஐக்கிய முண்ணனி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முண்ணனி தலா ஒருவரும் அடங்குவர். மூவின சமூகங்களை சேர்ந்தவர்கள் இச் சபையில் அங்கம் வகிக்கின்றனர். தவிசாளர் தெரிவில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் சார்பில் எச்.தாலிப் அலியும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் எஸ்.எம்.சுபியான் மற்றும் தேசிய மக்கள் சக்தி சார்பில் நஜிபுள்ளாவும் போட்டியிட்டனர்.இதில் திறந்த வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தி சபையை கைப்பற்றியது.குறித்த சபையில் உப தவிசாளராக விஜயானந்தம் விஜய குமார் திறந்த வாக்கெடுப்பு மூலமாக தெரிவு செய்யப்பட்டார்.இந்நிலையில் பிங்கிரிய பிரதேச சபைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றபோது பெரும்பான்மையைப் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் கமல் விஸ்வநாத் இன்று பிங்கிரிய பிரதேச சபையின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அத்தோடுபாத்தஹேவாஹெட்ட பிரதேச சபையின் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றபோது பெரும்பான்மையைப் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் ராஜநாயக்க இன்று பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபையின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.