• Jul 26 2025

நெடுந்தீவில் கைதான தமிழக மீனவர்களுக்கு ஓகஸ்ட் 6 வரை விளக்கமறியல்!

shanuja / Jul 25th 2025, 5:24 pm
image

நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை ஓகஸ்ட் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



கடந்த 13ஆம் திகதி இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இந்திய இழுவைப் படகினையும் அதிலிருந்து 07 இந்திய மீனவர்களையும் கைது செய்திருந்தனர் .


பின்னர் குறித்த மீனவர்களையும், இழுவை படகினையும்  கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். கடற்படையினர் விசாரணைகளின் பின்னர்  கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்

 

விசாரணைகளின் பின்னர் கடந்த 13ஆம் திகதி  ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் குறித்த மீனவர்களை இன்று (25)  வரை  விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.


வழக்கு மீண்டும் இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றில்  விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோதே  எதிர்வரும் ஓகஸ்ட்  6ஆம்  திகதி வரை விளக்க மறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.


இதேவேளை இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 25 படகுகளுடன் 185 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நெடுந்தீவில் கைதான தமிழக மீனவர்களுக்கு ஓகஸ்ட் 6 வரை விளக்கமறியல் நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை ஓகஸ்ட் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 13ஆம் திகதி இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இந்திய இழுவைப் படகினையும் அதிலிருந்து 07 இந்திய மீனவர்களையும் கைது செய்திருந்தனர் .பின்னர் குறித்த மீனவர்களையும், இழுவை படகினையும்  கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். கடற்படையினர் விசாரணைகளின் பின்னர்  கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர் விசாரணைகளின் பின்னர் கடந்த 13ஆம் திகதி  ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் குறித்த மீனவர்களை இன்று (25)  வரை  விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.வழக்கு மீண்டும் இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றில்  விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோதே  எதிர்வரும் ஓகஸ்ட்  6ஆம்  திகதி வரை விளக்க மறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.இதேவேளை இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 25 படகுகளுடன் 185 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement