• Jun 30 2024

தமிழ்நாட்டுக்கு தற்போதைய தேவை நல்ல தலைவர்களே - நடிகர் விஜய் தெரிவிப்பு...!

Anaath / Jun 28th 2024, 12:04 pm
image

Advertisement

நாம் மருத்துவம், பொறியியல் மட்டும் தான் நல்ல துறை என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால், மருத்துவர்களும், பொறியியலாளர்களும், வழக்கறிஞர்களும் நிறையப் பேர் இருக்கிறார்கள். இன்றைக்கு நமக்கு அதிமாக தேவைப்படுவது நல்ல தலைவர்கள் தான் என  நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி விருது விழா இன்று இடம்பெற்றது. இந்த விழாவில்  கலந்து கொண்ட  விஜய் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். 

குறித்த நிகழ்வில் உரையாற்றிய விஜய்,  உங்களுக்கு பிடித்த துறையை  தேர்வு செய்துகொள்ளுங்கள். வீட்டில் உள்ள பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் கலந்து பேசுங்கள். நாம் ஒரு துறையை தேர்வு செய்யும்போது அதில் எவ்வளவு தேவை இருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.

மருத்துவம், பொறியியல் மட்டும் தான் நல்ல துறை என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால், மருத்துவர்களும், பொறியியாலாளர்களும், வழக்கறிஞர்களும் என  நிறையப் பேர் இருக்கிறார்கள். இன்றைக்கு நமக்கு அதிமாக தேவைப்படுவது நல்ல தலைவர்கள் தான்.

தலைவர் என்பது அரசியல் ரீதியாக மட்டுமல்ல. எந்தத் துறையில் சிறந்து விளங்கினாலும் அந்தந்த துறைகளில் தலைமைப் பதவிக்கு வர முடியும். எதிர்காலத்தில் அரசியலும் கூட ஒரு வேலைவாய்ப்பு வழிகாட்டியாக இருக்கலாம். நன்கு படித்தவர் அரசியலுக்கு வர வேண்டும். நல்ல தலைவர்கள் வேண்டுமா? வேண்டாமா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

சமூக வலைதளத்தில் ஒருசில அரசியல் கட்சிகள் செய்யும் பொய் பிரசாரங்களை மாணவர்கள் நம்பக் கூடாது. அது சில நேரங்களில் புரளியாக கூட இருக்கலாம்” என்றார்.

மேலும் இதன் போது மாணவர்கள் நல்ல நண்பர்களை தேர்வு செய்ய வேண்டும் சுய ஒழுக்கம் கட்டுப்பாடு அவசியம் என்று அறிவுறுத்தல் தற்காலிக மகிழ்ச்சிக்கும், போதை பழக்கங்களுக்கும் அடிமையாகக் கூடாது என்று அறிவுறுத்தினார். மேலும், 'say no to drugs' என போதைப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என்று மாணவர்களை உறுதிமொழியையும் ஏற்க வைத்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கு தற்போதைய தேவை நல்ல தலைவர்களே - நடிகர் விஜய் தெரிவிப்பு. நாம் மருத்துவம், பொறியியல் மட்டும் தான் நல்ல துறை என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால், மருத்துவர்களும், பொறியியலாளர்களும், வழக்கறிஞர்களும் நிறையப் பேர் இருக்கிறார்கள். இன்றைக்கு நமக்கு அதிமாக தேவைப்படுவது நல்ல தலைவர்கள் தான் என  நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.2024 ஆம் ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி விருது விழா இன்று இடம்பெற்றது. இந்த விழாவில்  கலந்து கொண்ட  விஜய் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். குறித்த நிகழ்வில் உரையாற்றிய விஜய்,  உங்களுக்கு பிடித்த துறையை  தேர்வு செய்துகொள்ளுங்கள். வீட்டில் உள்ள பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் கலந்து பேசுங்கள். நாம் ஒரு துறையை தேர்வு செய்யும்போது அதில் எவ்வளவு தேவை இருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.மருத்துவம், பொறியியல் மட்டும் தான் நல்ல துறை என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால், மருத்துவர்களும், பொறியியாலாளர்களும், வழக்கறிஞர்களும் என  நிறையப் பேர் இருக்கிறார்கள். இன்றைக்கு நமக்கு அதிமாக தேவைப்படுவது நல்ல தலைவர்கள் தான்.தலைவர் என்பது அரசியல் ரீதியாக மட்டுமல்ல. எந்தத் துறையில் சிறந்து விளங்கினாலும் அந்தந்த துறைகளில் தலைமைப் பதவிக்கு வர முடியும். எதிர்காலத்தில் அரசியலும் கூட ஒரு வேலைவாய்ப்பு வழிகாட்டியாக இருக்கலாம். நன்கு படித்தவர் அரசியலுக்கு வர வேண்டும். நல்ல தலைவர்கள் வேண்டுமா வேண்டாமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.சமூக வலைதளத்தில் ஒருசில அரசியல் கட்சிகள் செய்யும் பொய் பிரசாரங்களை மாணவர்கள் நம்பக் கூடாது. அது சில நேரங்களில் புரளியாக கூட இருக்கலாம்” என்றார்.மேலும் இதன் போது மாணவர்கள் நல்ல நண்பர்களை தேர்வு செய்ய வேண்டும் சுய ஒழுக்கம் கட்டுப்பாடு அவசியம் என்று அறிவுறுத்தல் தற்காலிக மகிழ்ச்சிக்கும், போதை பழக்கங்களுக்கும் அடிமையாகக் கூடாது என்று அறிவுறுத்தினார். மேலும், 'say no to drugs' என போதைப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என்று மாணவர்களை உறுதிமொழியையும் ஏற்க வைத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement