• Sep 19 2024

தமிழ் மக்கள் தமது அரசியல் சார் உரிமைகளை வென்றெடுக்க ரணிலுக்கு வாக்களிக்கவேண்டும்- அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து..!

Sharmi / Sep 16th 2024, 1:31 pm
image

Advertisement

சரியான ஒரு அரசியல் அல்லது தலைமைத்துவம் நாட்டில் உருவாகின்றபோதுதான் நாடும் நாட்டு மக்களும் உயர்ச்சி பெறமுடியும் எனவும்  எமது நாட்டில் நேரடியாகவே நாம் கண்டுகொண்ட வரலாற்று உண்மை இது  எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஜனாதிபதி தேர்தலில் நடைபெற்ற ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கான பொதுமக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“குடி உயர கோன் உயரும்” என அன்று தமிழ் புலவர் ஔவையார் ஒரு நாட்டின் எழுச்சி குறித்து தனது புலமையால் கூறியிருந்தார். ஆனால் தற்போதைய கால சூழலில் அந்த வரியை சற்று மாறுதல்படுத்தியே நான் சிந்தித்து பார்க்கின்றேன். 

எனெனில் சரியான ஒரு அரசியல் அல்லது தலைமைத்துவம் நாட்டில் உருவாகின்றபோதுதான் நாட்டு மக்களும் உயர்ச்சி பெறுவார்கள்.

எமது நாட்டில் நேரடியாகவே நாம் கண்டுகொண்ட உண்மை இது.

அதனால்தான் நான் உங்களிடம் வெளிப்படையாகவே ஈ.பி.டி.பியுடன் எமது வழிகாட்லில் அணிதிரளுமாறு அழைப்பு விடுத்து வருகின்றேன்.

நாம் கூறும் வழிமுறை ஒருபோதும் தவறானதாக இருக்கப்போவதில்லை. இதை வலுப்படுத்த கடந்தகால வரலாறுகளும் உள்ளன. 

இதேநேரம் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது ஜனாதிபதி தேர்தல்.

அதனால்தான் நாட்டின் பொருளாதார மீட்சியை மட்டுமல்லாது தமிழ் மக்கள் தமது அரசியல் சார் உரிமைகளையும் அபிவிருத்திகளையும் வென்றெடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை பலப்படுத்த வேண்டும் என நான் உங்களிடம் அழைப்பு விடுத்து வருகின்றேன்.

வாக்குரிமை என்பது மக்களின் ஜனநாயக ஆயுதமாகும். அந்த ஆயுதத்தை நாட்டின் முன்னேற்றத்துக்காகவும், நமது முன்னேற்றத்துக்காகவும் பயன்படுத்துவதே காலத்தின் தேவையாக உள்ளது  

இதேநேரம் “ஜனாதிபதி தேர்தல் நெருங்கிவிட்டது.

குறித்த தேர்தலில் வாக்காளர்கள் தமது வாக்கை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இது நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகின்ற தேர்தல்.

குறிப்பாக அனுபவமற்ற, முதிர்ச்சியற்ற அரசியல்வாதிகளின், வெற்று பேச்சுக்களுக்கும் போலி விளம்பரங்களுக்கும் மக்கள் இம்முறை மயங்கமாட்டார்கள் என்பதும் உண்மை.

அதேநேரம் அனுபவமுள்ள, முதிர்ச்சியுள்ள, நாட்டை மீட்டெடுத்த தலைவரே உங்கள் தேர்வாக இருக்க வேண்டும். அந்த தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பதை நான் கூறிதான் உங்களுக்கு தெரியவேண்டும் என்றில்லை. 

ஏனெனில் நீங்கள் ஏற்கனவே அவருடைய எரிவாயு சிலிண்டர் சின்னத்தை வெற்றிபெறச் செய்ய தீர்மானத்துவிட்டீர்கள்.

வரிசை யுகத்தில் நின்று வலி சுமந்த நாள்களை நாம் மறந்துவிடக்கூடாது. அந்த நிலையிலிருந்து மீட்டு இன்று இயல்புநிலை உள்ளதெனில் அதற்கு ஜனாதிபதி ரணிலே காரணம். 

இதேவேளை நெருக்கடியான சூழ்நிலையிலும் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, உறுமய திட்டம், அஸ்வெசும மற்றும் பல விடயங்களை அவர் செய்து காட்டியுள்ளார்.

எனவே, எதிர்வரும் 21 ஆம் திகதி உங்களின் வாக்குகள் அனைத்தும் ரணில் விக்ரமசிங்கவின் எரிவாயு சிலிண்டர் சின்னத்திற்கானதாக இருப்பது அவசியம் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


தமிழ் மக்கள் தமது அரசியல் சார் உரிமைகளை வென்றெடுக்க ரணிலுக்கு வாக்களிக்கவேண்டும்- அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து. சரியான ஒரு அரசியல் அல்லது தலைமைத்துவம் நாட்டில் உருவாகின்றபோதுதான் நாடும் நாட்டு மக்களும் உயர்ச்சி பெறமுடியும் எனவும்  எமது நாட்டில் நேரடியாகவே நாம் கண்டுகொண்ட வரலாற்று உண்மை இது  எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஜனாதிபதி தேர்தலில் நடைபெற்ற ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கான பொதுமக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,“குடி உயர கோன் உயரும்” என அன்று தமிழ் புலவர் ஔவையார் ஒரு நாட்டின் எழுச்சி குறித்து தனது புலமையால் கூறியிருந்தார். ஆனால் தற்போதைய கால சூழலில் அந்த வரியை சற்று மாறுதல்படுத்தியே நான் சிந்தித்து பார்க்கின்றேன். எனெனில் சரியான ஒரு அரசியல் அல்லது தலைமைத்துவம் நாட்டில் உருவாகின்றபோதுதான் நாட்டு மக்களும் உயர்ச்சி பெறுவார்கள்.எமது நாட்டில் நேரடியாகவே நாம் கண்டுகொண்ட உண்மை இது.அதனால்தான் நான் உங்களிடம் வெளிப்படையாகவே ஈ.பி.டி.பியுடன் எமது வழிகாட்டலில் அணிதிரளுமாறு அழைப்பு விடுத்து வருகின்றேன். நாம் கூறும் வழிமுறை ஒருபோதும் தவறானதாக இருக்கப்போவதில்லை. இதை வலுப்படுத்த கடந்தகால வரலாறுகளும் உள்ளன. இதேநேரம் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது ஜனாதிபதி தேர்தல். அதனால்தான் நாட்டின் பொருளாதார மீட்சியை மட்டுமல்லாது தமிழ் மக்கள் தமது அரசியல் சார் உரிமைகளையும் அபிவிருத்திகளையும் வென்றெடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை பலப்படுத்த வேண்டும் என நான் உங்களிடம் அழைப்பு விடுத்து வருகின்றேன்.வாக்குரிமை என்பது மக்களின் ஜனநாயக ஆயுதமாகும். அந்த ஆயுதத்தை நாட்டின் முன்னேற்றத்துக்காகவும், நமது முன்னேற்றத்துக்காகவும் பயன்படுத்துவதே காலத்தின் தேவையாக உள்ளது  இதேநேரம் “ஜனாதிபதி தேர்தல் நெருங்கிவிட்டது.குறித்த தேர்தலில் வாக்காளர்கள் தமது வாக்கை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இது நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகின்ற தேர்தல்.குறிப்பாக அனுபவமற்ற, முதிர்ச்சியற்ற அரசியல்வாதிகளின், வெற்று பேச்சுக்களுக்கும் போலி விளம்பரங்களுக்கும் மக்கள் இம்முறை மயங்கமாட்டார்கள் என்பதும் உண்மை.அதேநேரம் அனுபவமுள்ள, முதிர்ச்சியுள்ள, நாட்டை மீட்டெடுத்த தலைவரே உங்கள் தேர்வாக இருக்க வேண்டும். அந்த தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பதை நான் கூறிதான் உங்களுக்கு தெரியவேண்டும் என்றில்லை. ஏனெனில் நீங்கள் ஏற்கனவே அவருடைய எரிவாயு சிலிண்டர் சின்னத்தை வெற்றிபெறச் செய்ய தீர்மானத்துவிட்டீர்கள்.வரிசை யுகத்தில் நின்று வலி சுமந்த நாள்களை நாம் மறந்துவிடக்கூடாது. அந்த நிலையிலிருந்து மீட்டு இன்று இயல்புநிலை உள்ளதெனில் அதற்கு ஜனாதிபதி ரணிலே காரணம். இதேவேளை நெருக்கடியான சூழ்நிலையிலும் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, உறுமய திட்டம், அஸ்வெசும மற்றும் பல விடயங்களை அவர் செய்து காட்டியுள்ளார்.எனவே, எதிர்வரும் 21 ஆம் திகதி உங்களின் வாக்குகள் அனைத்தும் ரணில் விக்ரமசிங்கவின் எரிவாயு சிலிண்டர் சின்னத்திற்கானதாக இருப்பது அவசியம் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement