• Sep 15 2024

ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து எம்.பிகளுக்கு மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள்- யாழில் ஆதாரங்களை வெளியிட்ட தம்பிராசா..!

Sharmi / Aug 31st 2024, 1:12 pm
image

Advertisement

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காக வைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராசா தெரிவித்தார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது தந்தையை பினாமியாக வைத்து மதுபானசாலைக்கான அனுமதியை கிளிநொச்சியில் பெற்றார் என குற்றஞ்சாட்டினார்.

யாழ் ஊடக அமையத்தில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மதுவரி திணைக்களத்திற்கு அங்கஜன் இராமநாதனின் தந்தை  எழுதியதாக தெரிவித்த கடிதமொன்றையும் வெளிப்படுத்தினார்.

ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக  பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட பலரும் ரணிலுக்கு ஆதரவளிக்க மதுபான சாலை அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என குற்றச்சாட்டை வெளியிட்டிருந்தார்.

இதேவேளை தயாசிறி ஜயசேகரவின் கருத்தை மறுத்த அங்கஜன் இராமநாதன், ஆதாரங்கள் வெளிப்படுத்தப்படாமல் தேர்தல் காலங்களில் சேறுபூசப்படுவதாக விசனம் வெளியிட்டிருந்த நிலையில் தம்பிராசா ஆதாரங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து எம்.பிகளுக்கு மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள்- யாழில் ஆதாரங்களை வெளியிட்ட தம்பிராசா. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காக வைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராசா தெரிவித்தார்.இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது தந்தையை பினாமியாக வைத்து மதுபானசாலைக்கான அனுமதியை கிளிநொச்சியில் பெற்றார் என குற்றஞ்சாட்டினார்.யாழ் ஊடக அமையத்தில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.மதுவரி திணைக்களத்திற்கு அங்கஜன் இராமநாதனின் தந்தை  எழுதியதாக தெரிவித்த கடிதமொன்றையும் வெளிப்படுத்தினார்.ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக  பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட பலரும் ரணிலுக்கு ஆதரவளிக்க மதுபான சாலை அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என குற்றச்சாட்டை வெளியிட்டிருந்தார்.இதேவேளை தயாசிறி ஜயசேகரவின் கருத்தை மறுத்த அங்கஜன் இராமநாதன், ஆதாரங்கள் வெளிப்படுத்தப்படாமல் தேர்தல் காலங்களில் சேறுபூசப்படுவதாக விசனம் வெளியிட்டிருந்த நிலையில் தம்பிராசா ஆதாரங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement