அனுராதபுரத்தில் முன்னணி பாடசாலை ஆசிரியர் ஒருவர் கணித ஆய்வகத்தில் 12 வயது மாணவனை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அனுராதபுர பொலிஸ் தலைமையகத்தின் பாடசாலை மற்றும் மகளிர் பணியகத்தால் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
12 வயது சிறுவனின் பெற்றோர் செய்த முறைப்பாடுக்கு அமைய, திரப்பன அத்துங்கமையில் வசிக்கும் திருமணமான ஆசிரியர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான ஆசிரியர் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் ரஞ்சித் ராஜகருணா, தனது கட்சிக்காரர் மீதான குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி, பிணை நிபந்தனைகளின் அடிப்படையிலும் அவரை விடுவிக்குமாறு வழக்கறிஞர் நீதிமன்றத்தைக் கோரினார்.
எனினும் முன்வைக்கப்பட்ட தகவல்களை கருத்தில் கொண்டு, நீதிமன்றம் சந்தேக நபரை 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுர தலைமை நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய உத்தரவிட்டார்.
பாடசாலைக்குள் வைத்து மாணவனை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்; இலங்கையில் அடுத்த பயங்கரம் அனுராதபுரத்தில் முன்னணி பாடசாலை ஆசிரியர் ஒருவர் கணித ஆய்வகத்தில் 12 வயது மாணவனை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அனுராதபுர பொலிஸ் தலைமையகத்தின் பாடசாலை மற்றும் மகளிர் பணியகத்தால் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.12 வயது சிறுவனின் பெற்றோர் செய்த முறைப்பாடுக்கு அமைய, திரப்பன அத்துங்கமையில் வசிக்கும் திருமணமான ஆசிரியர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரான ஆசிரியர் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் ரஞ்சித் ராஜகருணா, தனது கட்சிக்காரர் மீதான குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.அதன்படி, பிணை நிபந்தனைகளின் அடிப்படையிலும் அவரை விடுவிக்குமாறு வழக்கறிஞர் நீதிமன்றத்தைக் கோரினார்.எனினும் முன்வைக்கப்பட்ட தகவல்களை கருத்தில் கொண்டு, நீதிமன்றம் சந்தேக நபரை 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுர தலைமை நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய உத்தரவிட்டார்.