• Sep 29 2024

கொழும்பில் பதற்றம்..! ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மர்ம மரணம்..! நடந்தது என்ன?

Chithra / Dec 31st 2023, 10:20 am
image

Advertisement

 

கொழும்பின் புறநகர் பகுதி மாலபே - காஹன்தொட்ட பகுதியில் சிறார்கள் உள்ளிட்ட நால்வரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தாய், மகன்மார் மற்றும் மகள் ஆகியோரின் சடலங்களே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

35 வயதான தாய்,  09 மற்றும் 10 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த பெண்ணின் கணவர் சில தினங்களுக்கு முன்பு நஞ்சு அருந்தி உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு உயிரிழந்த கணவரின் 7 நாள் கரும காரியம் நேற்றிரவு நடாத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கணவரின் உயிரிழப்பினால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக மனைவி பிள்ளைகளுக்கு நஞ்சை கொடுத்து, தானும் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைளை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பில் பதற்றம். ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மர்ம மரணம். நடந்தது என்ன  கொழும்பின் புறநகர் பகுதி மாலபே - காஹன்தொட்ட பகுதியில் சிறார்கள் உள்ளிட்ட நால்வரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.தாய், மகன்மார் மற்றும் மகள் ஆகியோரின் சடலங்களே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.35 வயதான தாய்,  09 மற்றும் 10 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளன.குறித்த பெண்ணின் கணவர் சில தினங்களுக்கு முன்பு நஞ்சு அருந்தி உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.இவ்வாறு உயிரிழந்த கணவரின் 7 நாள் கரும காரியம் நேற்றிரவு நடாத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில், கணவரின் உயிரிழப்பினால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக மனைவி பிள்ளைகளுக்கு நஞ்சை கொடுத்து, தானும் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைளை ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement