சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து கொழும்பில் உள்ள பிரபல மசாஜ் மையங்களில் பணிபுரிந்த 15 தாய்லாந்து இளம் பெண்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு, ஹெவ்லொக் வீதியில் அமைந்துள்ள முன்னணி மசாஜ் நிலையமொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் 10 தாய்லாந்து பெண்களை கைது செய்துள்ளனர்.
எஞ்சிய ஐவரும் மவுண்ட்லெவனியா மற்றும் கொள்ளுப்பிட்டி பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் நால்வரின் விசா காலாவதியாகியிருப்பதும் தெரியவந்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டியவின் அறிவுறுத்தலின் பேரில், அதன் விசேட புலனாய்வு பிரிவின் தலைவர் விபுல் காரியவசம் தலைமையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு மசாஜ் மையங்களில் வசமாக சிக்கிய தாய்லாந்து யுவதிகள் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து கொழும்பில் உள்ள பிரபல மசாஜ் மையங்களில் பணிபுரிந்த 15 தாய்லாந்து இளம் பெண்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொழும்பு, ஹெவ்லொக் வீதியில் அமைந்துள்ள முன்னணி மசாஜ் நிலையமொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் 10 தாய்லாந்து பெண்களை கைது செய்துள்ளனர். எஞ்சிய ஐவரும் மவுண்ட்லெவனியா மற்றும் கொள்ளுப்பிட்டி பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நால்வரின் விசா காலாவதியாகியிருப்பதும் தெரியவந்துள்ளது.குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டியவின் அறிவுறுத்தலின் பேரில், அதன் விசேட புலனாய்வு பிரிவின் தலைவர் விபுல் காரியவசம் தலைமையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.