• Aug 09 2025

வவுனியா நகரை அதிர வைத்த இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் -135 வது ஆண்டு நடைபவனி!

Thansita / Aug 9th 2025, 3:59 pm
image

வவுனியாவின் முன்னணி தேசிய பாடசாலையான இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் 135 வது ஆண்டினை கொண்டாடும் முகமாக இன்று நடைபெற்ற நடைபவனியால் வவுனியா நகரமே அதிர்ந்தது.

வவுனியாவில் கல்வி மற்றும் இணைப்பாட விதானச் செயற்பாடுகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி 135 ஆவது ஆண்டினை கொண்டாடி வருகின்றது. 


இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும்  இக் கல்லூரியின் இந்நிகழ்வுக்கு வலுச் சேர்க்கும் முகமாக கல்லூரியின் மாணவிகள், பழைய மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மேள தாள வாத்தியங்கள் மற்றும் இசை மழையுடன் நபைவனி ஒன்றை மேற்கொண்டனர்.

பாடசாலை முன்பாக ஆரம்பித்த நடைபவனியானது இரண்டாம் குறுக்குத் தெரு ஊடாக கண்டி வீதியை அடைந்து அங்கிருந்து மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்து பசார் வீதி ஊடாகச் சென்று ஹொரவப்பொத்தானை வீதி ஊடாக பாடசாலை முன்றலை சென்றடைந்தது.


குறித்த நடைபவனி காரணமாக வவுனியா நகரமே வியப்பில் அதிர்ந்திருந்ததுடன், பலரும் அதனை வேடிக்கை பார்த்து மகிழ்தனர். 

பல பெற்றோர்கள், பழைய மாணவிகளுக்கு பள்ளிக்கால நினைவுகளை மீள மீட்டுத் தந்த நிகழ்வாக குறித்த நடைபவனி அமைந்திருந்தது.


வவுனியா நகரை அதிர வைத்த இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் -135 வது ஆண்டு நடைபவனி வவுனியாவின் முன்னணி தேசிய பாடசாலையான இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் 135 வது ஆண்டினை கொண்டாடும் முகமாக இன்று நடைபெற்ற நடைபவனியால் வவுனியா நகரமே அதிர்ந்தது.வவுனியாவில் கல்வி மற்றும் இணைப்பாட விதானச் செயற்பாடுகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி 135 ஆவது ஆண்டினை கொண்டாடி வருகின்றது. இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும்  இக் கல்லூரியின் இந்நிகழ்வுக்கு வலுச் சேர்க்கும் முகமாக கல்லூரியின் மாணவிகள், பழைய மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மேள தாள வாத்தியங்கள் மற்றும் இசை மழையுடன் நபைவனி ஒன்றை மேற்கொண்டனர்.பாடசாலை முன்பாக ஆரம்பித்த நடைபவனியானது இரண்டாம் குறுக்குத் தெரு ஊடாக கண்டி வீதியை அடைந்து அங்கிருந்து மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்து பசார் வீதி ஊடாகச் சென்று ஹொரவப்பொத்தானை வீதி ஊடாக பாடசாலை முன்றலை சென்றடைந்தது.குறித்த நடைபவனி காரணமாக வவுனியா நகரமே வியப்பில் அதிர்ந்திருந்ததுடன், பலரும் அதனை வேடிக்கை பார்த்து மகிழ்தனர். பல பெற்றோர்கள், பழைய மாணவிகளுக்கு பள்ளிக்கால நினைவுகளை மீள மீட்டுத் தந்த நிகழ்வாக குறித்த நடைபவனி அமைந்திருந்தது.

Advertisement

Advertisement

Advertisement