• Jun 14 2025

உலகையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்து; இறுதி நேரத்தில் நடந்த ட்விஸ்ட் உயிர் தப்பிய இளம்பெண்

Chithra / Jun 13th 2025, 11:42 am
image


 

அகமதாபாத் விமான விபத்து சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக குறித்த விமானத்தை பெண் ஒருவர் தவறவிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இச் சம்பவம் குறித்த தகவல்கள் இணையத்தில் தற்போது அதிகம் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு நேற்று மதியம் 1.10 இற்கு 230 பயணிகள், 12 பணியாளர்களுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில செக்கன்களில் குடியிருப்புப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்திருந்தார்.

இந்த நிலையில் பூமி சௌஹான் என்ற பெண், போக்குவரத்து நெரிசல் காரணமாக 10 நிமிடம் தாமதமாக வந்ததால் விமானத்தை தவறவிட்டுள்ளார். 

எனினும், அவர் செல்ல இருந்த விமானம்தான் இந்த பெரும் விபத்தில் சிக்கியது.

விமானத்தை தவறவிட்ட ஏமாற்றத்தில் இருந்த பூமி சௌஹானுக்கு, விமானம் விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

சௌஹான், ஏர் இந்தியா விமானத்தில் தனியாக லண்டனுக்குத் திரும்பத் தயாராக இருந்ததோடு,  இரண்டு வருடங்களுக்குப் பின்னர் விடுமுறைக்காக இந்தியா வந்திருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்து; இறுதி நேரத்தில் நடந்த ட்விஸ்ட் உயிர் தப்பிய இளம்பெண்  அகமதாபாத் விமான விபத்து சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக குறித்த விமானத்தை பெண் ஒருவர் தவறவிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் குறித்த தகவல்கள் இணையத்தில் தற்போது அதிகம் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு நேற்று மதியம் 1.10 இற்கு 230 பயணிகள், 12 பணியாளர்களுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில செக்கன்களில் குடியிருப்புப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.விபத்தில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்திருந்தார்.இந்த நிலையில் பூமி சௌஹான் என்ற பெண், போக்குவரத்து நெரிசல் காரணமாக 10 நிமிடம் தாமதமாக வந்ததால் விமானத்தை தவறவிட்டுள்ளார். எனினும், அவர் செல்ல இருந்த விமானம்தான் இந்த பெரும் விபத்தில் சிக்கியது.விமானத்தை தவறவிட்ட ஏமாற்றத்தில் இருந்த பூமி சௌஹானுக்கு, விமானம் விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.சௌஹான், ஏர் இந்தியா விமானத்தில் தனியாக லண்டனுக்குத் திரும்பத் தயாராக இருந்ததோடு,  இரண்டு வருடங்களுக்குப் பின்னர் விடுமுறைக்காக இந்தியா வந்திருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement