• Jun 09 2025

நல்லூர் பிரதேச சபையின் அலட்சியப் போக்கு; யாழில் மக்கள் ஒன்றுகூடி போராட்டம்

Chithra / Jun 9th 2025, 12:12 pm
image


'இணுவில் காரைக்கால் சிவன் கோவில் புனிதத்தை மீட்டெடுப்போம்' என்ற தொனிப்பொருளில் காரைக்கால் திண்மக் கழிவகற்றல் நிலையத்திற்கு எதிராக கண்டனப் போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது.  

இப்போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில்  யாழ்.மாவட்டச் செயலக முன்றலில்  இடம்பெற்றது.

சமூக செயற்பாட்டர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் அரசியல் கட்சியினர், சிவில் சமூக அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த மக்கள் 

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட காரைக்கால் திண்மக் கழிவகற்றல் நிலையத்தில் பிரதேச சபையினர் கழிவுகளை கொட்டி வருகிறார்கள். 

உரிய அனுமதிகள் பெறப்படாமல் இந்த நிலையம் இயங்குவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில், அண்மையில் அந்த நிலையம் தீப்பற்றி எரிந்து மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தியிருந்தது. இது முதல் தடவை அல்ல என்பதுடன் பல தடவைகள் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 

இதற்குரிய மாற்று ஏற்பாடுகள் சபையில் பேசப்பட்டாலும் நடைமுறையில் எவையும் சாத்தியப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

எனவே உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 


நல்லூர் பிரதேச சபையின் அலட்சியப் போக்கு; யாழில் மக்கள் ஒன்றுகூடி போராட்டம் 'இணுவில் காரைக்கால் சிவன் கோவில் புனிதத்தை மீட்டெடுப்போம்' என்ற தொனிப்பொருளில் காரைக்கால் திண்மக் கழிவகற்றல் நிலையத்திற்கு எதிராக கண்டனப் போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது.  இப்போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில்  யாழ்.மாவட்டச் செயலக முன்றலில்  இடம்பெற்றது.சமூக செயற்பாட்டர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் அரசியல் கட்சியினர், சிவில் சமூக அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.இதன்போது கருத்து தெரிவித்த மக்கள் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட காரைக்கால் திண்மக் கழிவகற்றல் நிலையத்தில் பிரதேச சபையினர் கழிவுகளை கொட்டி வருகிறார்கள். உரிய அனுமதிகள் பெறப்படாமல் இந்த நிலையம் இயங்குவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில், அண்மையில் அந்த நிலையம் தீப்பற்றி எரிந்து மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தியிருந்தது. இது முதல் தடவை அல்ல என்பதுடன் பல தடவைகள் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதற்குரிய மாற்று ஏற்பாடுகள் சபையில் பேசப்பட்டாலும் நடைமுறையில் எவையும் சாத்தியப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement