கொவிட் காலத்தில் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை சீன அரசாங்கம் நன்கொடைகளாக வழங்கியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார்.
கொவிட் காலத்தில் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை சீன அரசாங்கம் நன்கொடைகளாக வழங்கியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை முன்னெடுத்து இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சீனதூதுவர் விஜயம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் கோரிக்கைக்கு அமைவாக விஜயம் செய்த சீனதூதுவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.
வைத்தியசாலைக்கு சென்று வைத்தியசாலையின் சில பிரிவுகளுக்கு சென்று தூதுவர் பார்வையிட்டதுடன் அதனை தொடர்ந்து விசேட கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி கணேசலிங்கம்,பிரதி பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள்,மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமாங்கராஜா உட்பட்ட சிவில் சமூக பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது வைத்தியசாலையில் நிலவும் பல்வேறு குறைபாடுகள் தொடர்பில் சீன தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் அது தொடர்பிலான உதவிகளையும் வழங்குவதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
தூதரகங்கள் மூலமாக சிறிய உதவித்திட்டங்களையே முன்னெடுக்கமுடியும் எனவும் பாரிய வேலைத்திட்டங்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் ஊடாக கோரிக்கையினை சீன அரசாங்கத்திற்கு முன்வைக்கப்படும்போது அது தொடர்பிலான பரிசீலனைகள் முன்னெடுக்கப்படும் என இதன்போது தூதுவர் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த தூதுவர்,
கொவிட்ட கட்டத்தில், கோவிட்-19க்கு எதிராக இலங்கை போராடுவதற்கு உதவ, சீன அரசாங்கம் ஏராளமான தடுப்பூசிகளையும், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களையும் நன்கொடையாக வழங்கியது. அதுமுதல், தேவையிலுள்ள எளிய மக்களுக்கு வழக்கமான விநியோகம் மற்றும் அவசியமான தொகுப்புகளை வழங்குவதற்காக நாங்கள் இங்கு வருகிறோம்.
நாங்கள் ஸ்மார்ட்போன்களையும், அதன்பின் பள்ளிகளுக்கான போஸ்ட்பெய்ட் வசதிகளையும் நன்கொடையாக வழங்கியுள்ளோம்.
எவ்வாறாயினும், மொத்தத்தில், இலங்கை நண்பர்களுக்கு உதவுவதற்காக நாங்கள் பல விஷயங்களைச் செய்து வருகிறோம்; எந்த இக்கட்டான காலத்திலும் சீனா உங்களுக்குத் துணையாக நிற்கும்.
இந்த மருத்துவமனை வார்டுகள் போன்ற பெரிய திட்டங்கள் இருக்கிறதே, அவை பெரிய கட்டுமானத் திட்டங்களாகும்.
ஒவ்வொரு ஆண்டும் சீன அரசாங்கமும், சீன மக்களும் இலங்கை நண்பர்களுக்குப் பல்வேறு விஷயங்களுக்கான நிதியுதவிகளைச் செய்து வருகின்றனர்.
ஆனால் இதுவொரு பெரிய திட்டம். நீங்கள் விரும்பினால், உங்கள் அரசாங்கத்தின் மூலமாக எங்கள் அரசாங்கத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
இது 'அரசாங்கங்களுக்கு இடையேயான' வழிமுறை என்பதை நீங்கள் அறிவீர்கள். எங்கள் தூதரகத்தைப் பொறுத்தவரை, தூதரகம் சிறிய திட்டங்களை மட்டுமே மேற்கொள்ளும்; பெரியவை அல்ல, மிகச் சிறிய, மிகச் சிறிய திட்டங்கள் மட்டுமே. அவை மிகச் சிறியவை.
பெரிய திட்டமாக இருந்தால், எங்களால் பெரிய திட்டங்கள் குறித்து முடிவெடுக்க முடியாது, என்னால் ஒரு முடிவை எடுக்க முடியாது. நான் அதை எங்கள் அரசாங்கத்திற்கு அறிக்கையாக மட்டுமே சமர்ப்பிப்பேன். அதன்பின் அது அரசாங்கங்களுக்கு இடையேயான விஷயமாக மாறிவிடும்.
ஒருவேளை நீங்கள் உங்களுடைய தேவைகளை வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் மூலமாக சீன அரசாங்கத்திற்கும், அதாவது எங்கள் தூதரகத்தின் மூலமாகவும் கொண்டு சேர்க்கலாம். இந்தச் செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு அதுவொரு பயனுள்ள வழித்தடமாக இருக்கலாம்.
கொவிட் காலத்தில் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை சீன அரசாங்கம் நன்கொடைகளாக வழங்கியது-சீன தூதுவர் கொவிட் காலத்தில் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை சீன அரசாங்கம் நன்கொடைகளாக வழங்கியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார்.கொவிட் காலத்தில் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை சீன அரசாங்கம் நன்கொடைகளாக வழங்கியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார்.உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை முன்னெடுத்து இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சீனதூதுவர் விஜயம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.இதன்போது மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் கோரிக்கைக்கு அமைவாக விஜயம் செய்த சீனதூதுவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.வைத்தியசாலைக்கு சென்று வைத்தியசாலையின் சில பிரிவுகளுக்கு சென்று தூதுவர் பார்வையிட்டதுடன் அதனை தொடர்ந்து விசேட கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி கணேசலிங்கம்,பிரதி பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள்,மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமாங்கராஜா உட்பட்ட சிவில் சமூக பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.இதன்போது வைத்தியசாலையில் நிலவும் பல்வேறு குறைபாடுகள் தொடர்பில் சீன தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் அது தொடர்பிலான உதவிகளையும் வழங்குவதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.தூதரகங்கள் மூலமாக சிறிய உதவித்திட்டங்களையே முன்னெடுக்கமுடியும் எனவும் பாரிய வேலைத்திட்டங்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் ஊடாக கோரிக்கையினை சீன அரசாங்கத்திற்கு முன்வைக்கப்படும்போது அது தொடர்பிலான பரிசீலனைகள் முன்னெடுக்கப்படும் என இதன்போது தூதுவர் தெரிவித்தார்.இதன்போது கருத்து தெரிவித்த தூதுவர்,கொவிட்ட கட்டத்தில், கோவிட்-19க்கு எதிராக இலங்கை போராடுவதற்கு உதவ, சீன அரசாங்கம் ஏராளமான தடுப்பூசிகளையும், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களையும் நன்கொடையாக வழங்கியது. அதுமுதல், தேவையிலுள்ள எளிய மக்களுக்கு வழக்கமான விநியோகம் மற்றும் அவசியமான தொகுப்புகளை வழங்குவதற்காக நாங்கள் இங்கு வருகிறோம்.நாங்கள் ஸ்மார்ட்போன்களையும், அதன்பின் பள்ளிகளுக்கான போஸ்ட்பெய்ட் வசதிகளையும் நன்கொடையாக வழங்கியுள்ளோம். எவ்வாறாயினும், மொத்தத்தில், இலங்கை நண்பர்களுக்கு உதவுவதற்காக நாங்கள் பல விஷயங்களைச் செய்து வருகிறோம்; எந்த இக்கட்டான காலத்திலும் சீனா உங்களுக்குத் துணையாக நிற்கும்.இந்த மருத்துவமனை வார்டுகள் போன்ற பெரிய திட்டங்கள் இருக்கிறதே, அவை பெரிய கட்டுமானத் திட்டங்களாகும். ஒவ்வொரு ஆண்டும் சீன அரசாங்கமும், சீன மக்களும் இலங்கை நண்பர்களுக்குப் பல்வேறு விஷயங்களுக்கான நிதியுதவிகளைச் செய்து வருகின்றனர். ஆனால் இதுவொரு பெரிய திட்டம். நீங்கள் விரும்பினால், உங்கள் அரசாங்கத்தின் மூலமாக எங்கள் அரசாங்கத்தைத் தொடர்பு கொள்ளலாம். இது 'அரசாங்கங்களுக்கு இடையேயான' வழிமுறை என்பதை நீங்கள் அறிவீர்கள். எங்கள் தூதரகத்தைப் பொறுத்தவரை, தூதரகம் சிறிய திட்டங்களை மட்டுமே மேற்கொள்ளும்; பெரியவை அல்ல, மிகச் சிறிய, மிகச் சிறிய திட்டங்கள் மட்டுமே. அவை மிகச் சிறியவை. பெரிய திட்டமாக இருந்தால், எங்களால் பெரிய திட்டங்கள் குறித்து முடிவெடுக்க முடியாது, என்னால் ஒரு முடிவை எடுக்க முடியாது. நான் அதை எங்கள் அரசாங்கத்திற்கு அறிக்கையாக மட்டுமே சமர்ப்பிப்பேன். அதன்பின் அது அரசாங்கங்களுக்கு இடையேயான விஷயமாக மாறிவிடும்.ஒருவேளை நீங்கள் உங்களுடைய தேவைகளை வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் மூலமாக சீன அரசாங்கத்திற்கும், அதாவது எங்கள் தூதரகத்தின் மூலமாகவும் கொண்டு சேர்க்கலாம். இந்தச் செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு அதுவொரு பயனுள்ள வழித்தடமாக இருக்கலாம்.