• May 21 2024

சிறுவன், சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கான்ஸ்டபிளுக்கு ஏற்பட்ட நிலை..!

Chithra / Jan 18th 2024, 1:36 pm
image

Advertisement

 


சிறுவனையும் சிறுமியையும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வாதுவை பொலிஸில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாணந்துறை பதில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சேனாரத்னவின் ஆலோசனையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் பண்டாரவினால் சந்தேக நபர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.  

கடந்த 11ஆம் திகதி கொஸ்கொட பிரதேசத்தில் உள்ள தனது வீட்டுக்குச்  சென்றபோது அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த  7 வயது சிறுவனையும் 13 வயது சிறுமியையும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர் கொஸ்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சிறுவன், சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கான்ஸ்டபிளுக்கு ஏற்பட்ட நிலை.  சிறுவனையும் சிறுமியையும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வாதுவை பொலிஸில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.பாணந்துறை பதில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சேனாரத்னவின் ஆலோசனையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் பண்டாரவினால் சந்தேக நபர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.  கடந்த 11ஆம் திகதி கொஸ்கொட பிரதேசத்தில் உள்ள தனது வீட்டுக்குச்  சென்றபோது அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த  7 வயது சிறுவனையும் 13 வயது சிறுமியையும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர் கொஸ்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

Advertisement

Advertisement

Advertisement