இனத்தையும், மொழியையும் நேசிக்கின்ற அடுத்த தலைமுறையின் உருவாக்கம் தான் தனது இருப்புக்காகப் போராடும் ஒரு இனத்தின் எதிர்கால நம்பிக்கையாக அமைய முடியும் என இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுனம்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
முரசுமோட்டை முருகானந்தாக் கல்லூரியில் சிறிதரன் எம்.பியின் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் 2.1மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட கல்லூரியின் பிரதான மண்டபத்தை மாணவர்களின் பயன்பாட்டுக்கு கையளிக்கும் நிகழ்வின் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இனத்தையும், மொழியையும் நேசிக்கின்ற அடுத்த தலைமுறையின் உருவாக்கம் தான், தனது இருப்புக்காகப் போராடும் ஒரு இனத்தின் எதிர்கால நம்பிக்கையாக அமைய முடியும்.
அத்தகையோர் தலைமுறையின் தோற்றத்திற்கு வழிகோலும் சமூகக் கடப்பாட்டைக் கொண்ட பாடசாலைகள், கல்வி அடைவு மட்டத்திற்கான தளங்களாக மட்டுமல்லாது, பிள்ளைகளின் ஆளுமை விருத்திக்கும், தலைமைத்துவ வாண்மைக்குமான களங்களை ஏற்படுத்த வேண்டும்.
அந்தக் காலப்பெரும்பணியை முரசுமோட்டை முருகானந்தாக் கல்லூரி செவ்வனே நிறைவேற்றி வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கௌரவ.சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இனத்துவ உணர்வுள்ள அடுத்த தலைமுறையின் உருவாக்கமே தமிழ்த் தேசியத் தளத்தின் அரண்- சிறிதரன் எம்.பி சுட்டிக்காட்டு. இனத்தையும், மொழியையும் நேசிக்கின்ற அடுத்த தலைமுறையின் உருவாக்கம் தான் தனது இருப்புக்காகப் போராடும் ஒரு இனத்தின் எதிர்கால நம்பிக்கையாக அமைய முடியும் என இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுனம்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.முரசுமோட்டை முருகானந்தாக் கல்லூரியில் சிறிதரன் எம்.பியின் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் 2.1மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட கல்லூரியின் பிரதான மண்டபத்தை மாணவர்களின் பயன்பாட்டுக்கு கையளிக்கும் நிகழ்வின் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,இனத்தையும், மொழியையும் நேசிக்கின்ற அடுத்த தலைமுறையின் உருவாக்கம் தான், தனது இருப்புக்காகப் போராடும் ஒரு இனத்தின் எதிர்கால நம்பிக்கையாக அமைய முடியும். அத்தகையோர் தலைமுறையின் தோற்றத்திற்கு வழிகோலும் சமூகக் கடப்பாட்டைக் கொண்ட பாடசாலைகள், கல்வி அடைவு மட்டத்திற்கான தளங்களாக மட்டுமல்லாது, பிள்ளைகளின் ஆளுமை விருத்திக்கும், தலைமைத்துவ வாண்மைக்குமான களங்களை ஏற்படுத்த வேண்டும். அந்தக் காலப்பெரும்பணியை முரசுமோட்டை முருகானந்தாக் கல்லூரி செவ்வனே நிறைவேற்றி வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கௌரவ.சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.