• Sep 19 2024

எமனாக வந்த நாய்..! கீழே வீழ்ந்த தந்தை பஸ் மோதியதில் பலி..! - மகன் படுகாயம் samugammedia

Chithra / Jul 4th 2023, 2:51 pm
image

Advertisement

காலி  - கொழும்பு வீதியில் தடல்ல மயானத்துக்கு அருகில் தந்தை மற்றும் மகன் இருவரும் பயணித்த  மோட்டார் சைக்கிள் மீது நாய் மோதியதில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் மகன் காயமடைந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (04) காலை இடம்பெற்றுள்ளது.

தடல்ல வலவத்தையைச் சேர்ந்த  சுதத் நிஹால் (59) என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர்  தனது 32 வயது மகனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, தடல்ல மயானத்துக்கு  அருகில் நாய் ஒன்று  மோட்டார் சைக்கிளை நோக்கிப் பாயந்தபோதே  கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் கீழே வீழ்ந்துள்ளது.

இதன்போது,  பின்னால் வந்த காலி - கொழும்பு தனியார் பஸ்  வீதியில் வீழ்ந்து காணப்பட்ட நபரை மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். 

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன்  பஸ்ஸின் சாரதி  பொலிஸில் சரணடைந்துள்ளார்.

எமனாக வந்த நாய். கீழே வீழ்ந்த தந்தை பஸ் மோதியதில் பலி. - மகன் படுகாயம் samugammedia காலி  - கொழும்பு வீதியில் தடல்ல மயானத்துக்கு அருகில் தந்தை மற்றும் மகன் இருவரும் பயணித்த  மோட்டார் சைக்கிள் மீது நாய் மோதியதில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் மகன் காயமடைந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (04) காலை இடம்பெற்றுள்ளது.தடல்ல வலவத்தையைச் சேர்ந்த  சுதத் நிஹால் (59) என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர்  தனது 32 வயது மகனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, தடல்ல மயானத்துக்கு  அருகில் நாய் ஒன்று  மோட்டார் சைக்கிளை நோக்கிப் பாயந்தபோதே  கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் கீழே வீழ்ந்துள்ளது.இதன்போது,  பின்னால் வந்த காலி - கொழும்பு தனியார் பஸ்  வீதியில் வீழ்ந்து காணப்பட்ட நபரை மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன்  பஸ்ஸின் சாரதி  பொலிஸில் சரணடைந்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement