• Jun 03 2025

இளைஞர் கழகங்களை அமைக்கும் நிகழ்வு கோப்பாயில் முன்னெடுப்பு!

Thansita / Jun 1st 2025, 6:04 pm
image

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் இளைஞர் கழகங்களை அமைக்கும் நிகழ்வு இன்று யாழ்.கோபாயில் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர், யுவதிகளை கழகமாக உருவாக்கி தேசிய ரீதியாக அவர்களது சேவைகள் மேற்கொள்ளல் தொடர்பாக இளைஞர் கழகம் நிறுவப்பட்டது.

இதன் போது இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ. ரஜீவன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் இளைஞர் யுவதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

உரையாற்றிய பிரதி அமைச்சர், இளைஞர் கழகத்தின் முக்கியத்துவம், இளைஞர்களின் கனவுகளை முன்னோக்கி கொண்டு செல்லும் வேலைத் திட்டம் உள்ளிட்ட விடயங்களை பகிர்ந்து கொண்டார்.


இளைஞர் கழகங்களை அமைக்கும் நிகழ்வு கோப்பாயில் முன்னெடுப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் இளைஞர் கழகங்களை அமைக்கும் நிகழ்வு இன்று யாழ்.கோபாயில் முன்னெடுக்கப்பட்டது.இதன் போது கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர், யுவதிகளை கழகமாக உருவாக்கி தேசிய ரீதியாக அவர்களது சேவைகள் மேற்கொள்ளல் தொடர்பாக இளைஞர் கழகம் நிறுவப்பட்டது.இதன் போது இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ. ரஜீவன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் இளைஞர் யுவதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.உரையாற்றிய பிரதி அமைச்சர், இளைஞர் கழகத்தின் முக்கியத்துவம், இளைஞர்களின் கனவுகளை முன்னோக்கி கொண்டு செல்லும் வேலைத் திட்டம் உள்ளிட்ட விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement