• May 31 2025

முல்லைத்தீவில் பாடசாலையில் வழங்கிய உணவை, உட்கொண்ட மாணவர்களுக்கு ஏற்பட்ட கதி

Thansita / May 28th 2025, 11:15 pm
image

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாடசாலையில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 21 மாணவர்கள் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் அமைந்துள்ள பாரதி வித்யாலயத்தில் இன்றைய தினம் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக ஒரே வகுப்பைச் சேர்ந்த 21 மாணவர்கள்  தர்மபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்

பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக 10 மாணவர்கள் கிளிநொச்சி  வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்

இச்சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு சுகாதார பரிசோதர்கள் உணவின் மாதிரியை பெற்றுச் சென்றுள்ளனர் 

இருப்பினும் ஏனைய வகுப்பைச் சேர்ந்த எந்த ஒரு மாணவர்களுக்கும் உணவு ஒவ்வாமை ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்

முல்லைத்தீவில் பாடசாலையில் வழங்கிய உணவை, உட்கொண்ட மாணவர்களுக்கு ஏற்பட்ட கதி முல்லைத்தீவு மாவட்டத்தின் பாடசாலையில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 21 மாணவர்கள் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளதுகுறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் அமைந்துள்ள பாரதி வித்யாலயத்தில் இன்றைய தினம் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக ஒரே வகுப்பைச் சேர்ந்த 21 மாணவர்கள்  தர்மபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக 10 மாணவர்கள் கிளிநொச்சி  வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்இச்சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு சுகாதார பரிசோதர்கள் உணவின் மாதிரியை பெற்றுச் சென்றுள்ளனர் இருப்பினும் ஏனைய வகுப்பைச் சேர்ந்த எந்த ஒரு மாணவர்களுக்கும் உணவு ஒவ்வாமை ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்

Advertisement

Advertisement

Advertisement