• Jul 27 2024

பெருந்தொகை மக்களுடன் சுதந்திரக் கட்சியின் புதிய கூட்டணியின் முதலாவது பேரணி..!

Chithra / May 21st 2024, 11:08 am
image

Advertisement

 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்படும் புதிய கூட்டணியின் முதலாவது பேரணி மற்றும் பொதுக்கூட்டம் எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மாவட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு அம்பலந்தோட்டை சந்தியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவருமான மஹிந்த அமரவீரவின் தலைமையில் இந்த முதலாவது மக்கள் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் முதலாவது பேரணியை பெருந்தொகையான மக்கள் பங்களிப்புடன், 

முன்னணி அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பெருந்தொகை மக்களுடன் சுதந்திரக் கட்சியின் புதிய கூட்டணியின் முதலாவது பேரணி.  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்படும் புதிய கூட்டணியின் முதலாவது பேரணி மற்றும் பொதுக்கூட்டம் எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மாவட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு அம்பலந்தோட்டை சந்தியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவருமான மஹிந்த அமரவீரவின் தலைமையில் இந்த முதலாவது மக்கள் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் முதலாவது பேரணியை பெருந்தொகையான மக்கள் பங்களிப்புடன், முன்னணி அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement