அதிக பாதுகாப்பிற்காக சமையலறை அடுப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 19 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை யாரோ திருடிச் சென்றுள்ளதாக புலத்கொஹுபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
புலத்கொஹுபிட்டிய ஹிக்கொட பிரதேசத்தில் தங்கியிருந்த தங்கப் பொருட்களின் உரிமையாளரான 57 வயதுடைய பெண்ணே இவ்வாறு புலத்கொஹுபிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
உலைக்குள் தங்கப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை நன்கு அறிந்த ஒருவரால் இந்த திருட்டு இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
திருடிய நபர் யார் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.