• Jun 12 2025

பயிரிடப்படாத காணிகளை குறிவைத்த அரசாங்கம்! இன்று முதல் விசேட நடவடிக்கை

Chithra / Jun 11th 2025, 9:38 am
image


நாட்டின் அனைத்து பயிரிடப்படாத காணிகளையும் ஒன்றாக இணைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது, விவசாய அமைச்சர் கே.டி லால் காந்த இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையுடன் இணைந்து, கந்தளாய் சீனித் தொழிற்சாலை தளத்தில் 2,000 ஏக்கர் சோள பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கையானது இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்மூலம் பயிரிடப்படாத நிலங்களைப் பயன்படுத்தி நாட்டின் விவசாய உற்பத்தியை மேம்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

பயிரிடப்படாத காணிகளை குறிவைத்த அரசாங்கம் இன்று முதல் விசேட நடவடிக்கை நாட்டின் அனைத்து பயிரிடப்படாத காணிகளையும் ஒன்றாக இணைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது, விவசாய அமைச்சர் கே.டி லால் காந்த இதனை தெரிவித்துள்ளார்.இந்த நடவடிக்கையுடன் இணைந்து, கந்தளாய் சீனித் தொழிற்சாலை தளத்தில் 2,000 ஏக்கர் சோள பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.இந்த நடவடிக்கையானது இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.இதன்மூலம் பயிரிடப்படாத நிலங்களைப் பயன்படுத்தி நாட்டின் விவசாய உற்பத்தியை மேம்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement